Best Poem - Nominated by UN

on Monday, March 30, 2009


When I born, I black
When I grow up, I black
When I go in Sun, I black
When I scared, I black
When I sick, I black
And when I die, I still black
And you white fellowWhen you born, you pink
When you grow up, you white
When you go in sun, you red
When you cold, you blue
When you scared, you yellow
When you sick, you green
And when you die, you gray
And you calling me colored?

ஹெல்த் எப்படி இருக்கு ?

எஸ்.ராமகிருஷ்ணன் மீது எனக்குப் பொறாமையாக உள்ளது. எப்படி இந்த மனிதரிடம் பேசும் எல்லா மனிதர்களும் அற்புதமாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று. இவர் காசிக்குச் சென்றாலும் சரி, கரந்தட்டாங்குடி சென்றாலும் சரி, இவரிடம் பேசும் மனிதர்கள் அற்புதம் அற்புதமாகவே பேசுகிறார்கள். ஆனால் என் கதை ?

அது எப்படித்தான் தேர்ந்தெடுத்து என்னிடம் வந்து சேர்கிறார்களோ தெரியவில்லை. நேற்று என் தோழி ஆனந்தி கேட்டாள். “ விஜய் டிவியில் உங்களைப் பார்த்தேன். அவந்திகா ரொம்ப அழகு. நீங்கள் ஒன்றும் தியாகம் செய்து விடவில்லை ” இந்த் ஆனந்தி எனக்கு 30 போன் செய்தால் ஒரே ஒரு முறை அவள் போனை எடுப்பேன்.

“ நீ என்ன பொம்பளை ஜெயமோகனா ? ” என்று குலைத்து விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டேன்.

இன்று காலை மீண்டும் பேசியவள் தன்னை இதுவரை யாருமே இவ்வளவு மோசமாக திட்டியதில்லை என்று கூறி மேலும் சிலது சொன்னாள். எனக்கே ஜெயன் மீது பாவமாகப் போய்விட்டது. பொதுவாக நான் பேசுவதே இல்லை. அவந்திகாவிடம் கூட ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசுவேன். (கொலப் பசி பசிக்குது; சீக்கிரம் கவனிம்மா)

எனக்கு தொலைபேசி அழைப்புகளும் அவ்வளவாக வருவதில்லை. சில நாட்களில் ஒன்றிரண்டு அழைப்புகள் கூட வராது. திடீரென்று யோசித்துப் பார்ப்பேன். ‘ காலையிலிருந்து நாம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அல்லவா ? ‘ என்று. இப்படியே பல தினங்கள் செல்லும், ஒரு வார்த்தை பேசாமல்.

இது எனக்குப் பிடித்திருக்கிறது. அதுவும் குறுஞ்செய்தி வசதி வந்தபிறகு எப்போதாவது பேசும் மனிதர்கள் கூட குறுஞ்செய்தியே அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

இந்தியர்கள் அதிகம் பேசுகிறார்கள். அதிலும் மலையாளிகளை இந்த விஷயத்தில் யாருமே அடித்துக் கொள்ள முடியாது. ஒருமுறை பாலக்காட்டிலிருந்து என் நண்பர் ஒருவர் ஆஸ்துமா காரணமாக மூச்சு விட முடியாமல் போய் அவசரமாக ‘ஐக்யூ ’ வில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அத்தகவலை எனக்குத் தெரிவிக்க போன் செய்து 10 நிமிடம் பேசினார். ஏகேஎம் அதிகம் பேசுவதற்குக் கூட இதுதான் காரணம் என்று தோன்றுகிறது. ஏகேஎம் பற்றிப் பிறகு சொல்கிறேன்.

நான் ஆட்டோவில் செல்பவனாதலால் இந்த ஆட்டோ டிரைவர்களின் பேச்சினால் வேறு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். என் முகத்தைப் பார்த்தாலே பேச வேண்டும் என்று தோன்றும் போலிருக்கிறது. நேற்று ஒரு ஆட்டோக்காரர் ‘ அறுபத்து மூவர் விழா ‘ வில் அவருடைய ஸ்டாண்டில் என்னென்ன அய்ட்டங்கள் சமைத்து மக்களுக்கு வழங்கினார்கள் என்றும், அடுத்த ஸ்டாண்டில் என்னென்ன அய்ட்டங்கள் சமைத்து வழங்கினார்கள் என்றும் நான் செல்லுமிடம் சேரும் வரை விலாவரியாக விளக்கிக் கொண்டு போனார். (மயிலையில் அறுபத்து மூவர் விழா அன்று யாரும் வீட்டில் சமைக்க மாட்டார்கள். மயிலை முழுவதும் மூலைக்கு மூலை அன்னதானம் நடந்து கொண்டிருக்கும்).

இவருடைய ஸ்டாண்டில் சாம்பார் சாதம், தயிர் சாதம், புளியோதரை எல்லாம் போட்டிருக்கிறார்கள். மாலையில் சர்பத். கூட பிஸ்கட். ஒரு ஐயரை வைத்தே சமைத்திருக்கிறார்கள். அந்த ஐயரின் பெயர் கூட சொன்னார். எனக்கு மறந்து தொலைந்து விட்டது.

ஆனால் என்ன இருந்தாலும் அடுத்த ஸ்டாண்டில் போட்ட அய்ட்டங்கள்தான் வெகு அருமையாக இருந்ததாம். அவர்கள் பிரிஞ்ஜி, வாங்கிபாத், பிஸிபேளாபாத் போன்ற அரிதான அய்ட்டங்களைத் தயாரித்திருக்கிறார்கள். மேற்கண்ட சப்ஜெக்ட் பற்றி அரை மணி நேரம் பேசி விட்டு பின்னர், இந்த ஆண்டு அறுபத்து மூவர் விழா பங்குனியின் ஆரம்பத்திலேயே வந்து விட்டதென்றும், அறுபத்து மூவர் விழா மட்டுமல்ல, ஈஸ்டர், தீபாவளி போன்ற பண்டிகைகள் கூட முன்கூட்டியே வந்து விட்டதென்றும் ஆச்சரியத்துடன் சொன்னார். அதை விட ஆச்சரியத்துடன் இந்த ஆண்டு ஃபெப்ருவரியில் 29 ஆம் தேதியும் வந்தது என்றார். ” எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்குல்ல சார் ? “ என்று அவர் காலம் ( Time ) பற்றி உரையாற்ற ஆரம்பித்த போது என் இடம் வந்து விட்டது.

என் மாமனாரின் சுப ஸ்வீகாரத்துக்காக முந்தா நாள் சின்மயா நகர் சென்ற போது - ஒரு மணி நேர ஆட்டோ பயணம் – வேறொரு ஆட்டோக்காரர் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்.

ஏதேதோ சொல்கிறார்; ஏதேதோ பேசுகிறார். வாயை மூடவே இல்லை. பேச்சு. பேச்சு. பேச்சு. ட்ராபிக் பற்றி பேச்சு. சென்னை நகர வெய்யில் பற்றி பேச்சு. அரசியல்வாதிகளின் ஊழல் பற்றி பேச்சு. ( இந்த சப்ஜெக்ட் பற்றி பேசாத ஆட்டோகாரரே கிடையாது என்று சொல்லலாம் ).

எனக்கு மண்டையில் ஆயிரம் வண்டுகள் பறப்பது போல் இருந்தது. ஒரு கட்டத்தில் ‘ ம் ‘ போடுவதே ஏதோ 100 கிலோ எடையை ‘ தம் ‘ கட்டி தூக்குவது போல் இருந்தது.

ஒரு கட்டத்தில் ‘ ம் ‘ கொட்டுவதை நிறுத்தி விட்டு கைத்தொலைபேசியில் பழைய குறுஞ்செய்திகளில் தேவையில்லாததை ‘ டெலீட் ‘ செய்ய ஆரம்பித்து விட்டேன். ஆனாலும் ஆட்டோக்காரர் விடாமல் பேசிக் கொண்டுதான் இருந்தார் – நான் சின்மயா நகர் சென்று சேரும் வரை.

ஒரு நாள் ஈரோட்டிலிருந்து ஒரு அன்பர் என்னைப் போனில் அழைத்தார். அழைத்தவரை எனக்கு முன்பின் தெரியாது. என் எழுத்தைப் படித்துவிட்டு என்னுடன் பேச வேண்டும் போல் தோன்றியிருக்கிறது. எப்படியோ என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து விட்டார். சரி. என்ன பேசினார் தெரியுமா ?

“உங்கள் இயற்பெயர் என்ன சார் ? “

“இயற்பெயரா ? என்னை எல்லோரும் சாரு என்றுதான் அழைக்கிறார்கள். அது தான் என் இயற்பெயர் “ என்றேன்.

” அது எப்படி சார் ? உங்கள் அப்பா அம்மா வைத்த பெயர் அதுவா ? ”

” அம்மா வைத்த பெயர் வேறு; அப்பா வைத்த பெயர் வேறு .... “

(அப்பா வைத்த பெயரை நிச்சயமாக வெளியே சொல்ல முடியாது; உதயசூரியன்)

” ஓ.... ஆனாலும் இயற்பெயர் என்று ஒன்று இருக்க வேண்டுமே சார்? ”

“இல்லை. பெயரை மாற்றிக் கொண்டு விட்டேன். எனக்கு வரும் செக் கூட சாரு நிவேதிதா என்ற பெயரில் தான் வருகிறது..... ”

“சரி சார்..... இதற்கு முன்னால் ஒரு பெயர் இருந்திருக்க வேண்டுமே....அது தான் இயற்பெயர்... அந்த இயற் பெயர் என்ன ? ”

“இதோ பாருங்கள் மிஸ்டர்.... அந்த இயற்பெயர் உங்களுக்கு எதற்கு ? “

“இல்லை சார்.... தெரிந்து கொள்ள வேண்டும் ஒரு ஆர்வம். ”

“அதைத் தெரிந்து கொண்டு உங்களுக்கு என்ன ஆகப் போகிறது ? ”

“உங்கள் எழுத்து மீதுள்ள ஆர்வம்தான் சார் காரணம்.... ”

“அப்படியானால் சாரு நிவேதிதாதான். அது தான் என் இயற்பெயர் “

“சார்.... என்ன சார் இது? உங்கள் அம்மா அப்பா அப்படித்தான் உங்களை அழைப்பார்களா ? ”

“என் அம்மா, அப்பாவை நான் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் பார்ப்பது வழக்கம். அதிலும் என் அம்மா இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அப்பா கூப்பிடும் பெயர் உங்களுக்கு எதற்கு ? ”

-இப்படியே இயற்பெயர் என்ற அந்த சனியன் பிடித்த விஷயத்தை பற்றியே 10 நிமிடம் நடந்தது உரையாடல். கடைசிவரை அவர் கேட்டதை நான் சொல்லவில்லை.

5 நிமிடம் கழித்து மீண்டும் அவரே போன் செய்தார்.

“சார், கண்டு பிடித்து விட்டேன். உங்கள் இணய தளத்தில் அறிவழகன் என்று போட்டிருக்கிறதே, அது தானே உங்கள் இயற்பெயர் ? ”

இதற்கு அடுத்து ஐந்து நிமிடம் போல் என் அப்பாவையும், இயற்பெயர் என்ற விஷயத்தையும், அறிவு அழகு போன்ற விஷயங்களையும் திட்டு திட்டு என்று திட்டித் தீர்த்தேன்.

பிறகு, அந்த நம்பரை ‘ ஸேவ் ’ செய்து அதில் ‘ டார்ச்சர் ‘ என்று குறித்து வைத்திருக்கிறேன்.

வேறொரு வகையான டார்ச்சர் இருக்கிறது. ஒரு நாள் ஒரு அன்பர் தொலைபேசியில் அழைத்து “ ஹெல்த் எப்படி இருக்கு ? ” என்றார்.

“என் ஹெல்த்துக்கு என்ன பிரச்சினை? ” என்று சூடாக கேட்டேன்.

‘ போன் செய்து இப்படி என்னுடைய ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறார்களே ‘ என்ற கோபம் ஏறியது.

“இல்லை சார். சர்ஜரி செய்திருக்கிறீர்களே, அதனால் கேட்டேன் ”

“சர்ஜரி செய்து இரண்டு வருடம் ஆகிறது. இப்போது என்ன அதற்கு ? ”

“இல்லை சார்....உஷாராக இருக்க வேண்டுமே, அதனால் கேட்டேன் “

அவருடைய நண்பர் ஒருவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம்; அதற்குப் பிறகு எப்போதுமே ரொம்ப கவனமாகத்தான் இருக்கிறாராம். அவர் கூறிய விஷயம் கவனம் அல்ல; மரண பயம்.

நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் பேர் இருதய அறுவை சிகிச்சை செய்தவுடன் ஆளே மாறிப் போய் விடுகிறார்கள். எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குகிறார்கள். பால குமாரனின் கேள்வி பதிலைப் பாருங்கள். மனிதர் 100 வயதைத் தாண்டிய – ஏதோ ஒரு படு பயங்கரமான நோயினால் தாக்குண்டவரைப் போல் தன் தினசரி வாழ்வு பற்றி பதில் சொல்கிறார்.

நான் அந்த அன்பரிடம் சொன்னேன். எனக்கு இதயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உடம்பில் கொழுப்பு கூடி ரத்தக் குழாயை அடைத்து விட்டதால் வேறு ஒரு ‘ வழி ‘ செய்திருக்கிறார்கள். இனிமேல் நான் கொழுப்பு கூடிய பொருட்களை சாப்பிடக் கூடாது. அவ்வளவுதான்.

இதை எவ்வளவு விளக்கியும் அவருக்குப் புரியவில்லை. ஏதோ ஒரு எய்ட்ஸ் நோயாளியிடம் பேசுவது போலவே பேசிக்கொண்டிருந்தார். நான் இம்மாதிரி சமயங்களில் பொதுவாக இணைப்பைத் துண்டித்து விடுவேன். ஆனால் அன்றைய தினம், இது எவ்வளவு தூரம் தான் போகிறது, பார்த்து விடுவோம் என்ற நிலையில் இருந்தேன். அரை மணி தூரம் சென்றது அந்த உரையாடல்.

பேசி முடித்ததும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். ‘மற்றவர் மீது அக்கறை காட்டுகிறோம் ’ என்ற நினைப்பிலேயே மற்றவர்களை எப்படி சித்ரவதைக்கு ஆளாக்குகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு நாள் ஒரு திருமண விருந்தின் போது சிக்கனும் சப்பாத்தியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த என் மைத்துனர் ஏதோ தீயை மிதித்து விட்டவரைப் போல் பதறிப் போய் “ நான் வெஜ்ஜெல்லாம் சாப்பிடலாமா? ” என்று அலறினார்.

பிறகு அவரும் மேற்கண்ட ஹெல்த் லெக்சரை அரைமணி நேரம் கொடுத்தார்.

நான் சொன்னேன், “ தயிர், ஆவக்காய் ஊறுகாய், வடாம், அப்பளம், மூன்று வேளையும் சோறு, நெய் போன்ற விஷயங்கள் தான் ஆபத்தானவை. சிக்கன் அல்ல ”

உடல் நலம் பற்றி மக்கள் பலவிதமான தவறான நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு இப்படி என்னைப் போன்ற ஆத்மாக்களை வதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நடிகர் குடிக்க மாட்டார்; சிகரெட் புகைக்க மாட்டார். காப்பி, டீ கூட கிடையாது. அவரும் நானும் ஒரு நாள் போட் க்ளப்பில் அவர் காரினுள் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தோம். இரண்டு பேரும் சாப்பிடுவதற்கு அவர் ஐஸ்கிரீம் வாங்கி வந்திருந்தார். அதில் கால் கிலோ அளவுக்கு போட்டிருந்தது முந்திரிப் பருப்பு.

ஒரு ஆஃப் பாட்டில் பிராந்தி குடித்திருந்தால் கூட அவ்வளவு கொழுப்பு என் உடம்பில் சேர்ந்திருக்காது. ஒரு வாரத்திற்கு கடும் பத்தியம் கிடந்து அந்த முந்திரிப் பருப்பை சமன் செய்தேன்.

யார் பேச ஆரம்பித்தாலும் ‘ஹெல்த் எப்படி இருக்கு? ’ என்ற டார்ச்சருடன் தான் ஆரம்பிக்கிறார்கள். எப்படி இவர்களை தவிர்ப்பது என்று தெரியவில்லை.

பேச்சு மட்டுமல்ல; சமயங்களில் பிறர் விடும் கொட்டாவி கூட பிரச்சினையாக இருக்கிறது எனக்கு. எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பின் இரண்டு வாட்ச்மேன்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதில் நைட் வாட்ச்மேனாக இருப்பவர் பெயர் வரதன். சினிமா சான்ஸ் தேடி ஆந்திராவிலிருந்து சென்னை வந்த லட்சக்கணக்கான ஜனங்களில் ஒருவர். முயற்சியில் தோல்வியுற்று வாட்ச்மேனாகி விட்டார்.

நான் இப்படி கெட்ட கனா கண்டு நடு நிசியில் விழித்துக் கொண்டு விடுகிறேன் அல்லவா ? உடனே சிறிது நேரத்தில் குழாயில் தண்ணீர் அடிக்க ஆரம்பித்து விடுவார் வரதன். அது ஒரு ஓட்டைக் குழாய். சத்தத்தில் எங்கள் குடியிருப்பே அதிரும். தண்ணீரை அடித்து வாசலில் நாங்கள் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றுவார். தினமும் இப்படி இரண்டு மணிக்கா தண்ணீர் அடிக்கிறார் என்ற சந்தேகம் வந்தது. இல்லை. நான் நான்கு மணிக்கு எழுந்தால் நான்கு மணிக்கு குழாய் நாராசம் செவிகளில் பாயும். சில சமயங்களில் தூங்கிபோய் ஆறு மணிக்கு எழுந்தால் ஆறு மணிக்கு குழாய் சப்தம் கேட்கும். அப்போது தான் தெரிந்தது; வரதன் நான் எழுந்து விளக்கைப் போட்டால் என்னை ‘இம்ப்ரெஸ் ’ செய்வதற்காக இந்த வேலையைச் செய்கிறார் !

இதனால் நான் விளக்கையே போடாமல் இருட்டிலேயே பல் துலக்கி விட்டு இருட்டிலேயே யோகாவை ஆரம்பித்துப் பார்த்தேன். ஆனால் வரதன் ஒரு சூரப்புலி. நான் எழுந்து விட்டதை எப்படியே அறிந்து கொண்டு குழாயை உடைக்க ஆரம்பித்து விடுவார்.

அடுத்த பிரச்சினை: பாட்டு. பெருங்குரலெடுத்து பழைய தமிழ்ப் பாடல்களை பாடுவார். பாடாத நேரங்களில் ஊருக்கே கேட்பது போல் கொட்டாவி விடுவார்.

‘ இப்படிக் கொட்டாவி விட்டு என் தூக்கத்தைக் கெடுக்காதே ‘ என்று எங்களுக்கெல்லாம் பாதுகாவலனாக இருக்கும் ஒரு நைட் வாட்ச்மேனிடம் போய்ச் சொல்ல முடியுமா ? ம்ஹூம். நான் படித்த மார்க்ஸ், எங்கெல்ஸெல்லாம் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். இந்த ஒரு ஆளாலேயே வீட்டை மாற்றி விடலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

* * *

சமயங்களில் எந்த விதமாகவும் தப்பிக்க முடியாதபடி சிலரிடம் மாட்டிக் கொண்டு விடுவோம். அந்த குஜராத்திகாரர் அறுவைத்திலகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மாட்டினால் ஒரு மணி நேரத்திற்கு பின்னி பெடல் எடுத்து விடுவார் என்று சொல்லியிருக்கிறாள் அவந்திகா. அவர் என்னுடைய சொந்தக்காரர். குஜராத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்றால் அவர் என் மைத்துனியின் மகனின் மாமனார். காதல் திருமணம்.

அவந்திகாவின் தந்தை இறந்த அன்று வீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அன்றைய தினசரி என் கையில் இருந்தது. வந்தார் அந்த சேட்.

‘ ஆகா, ஆபத்து நெருங்கிவிட்டதே ‘ என்ற கவலையுடன் நெளிய ஆரம்பித்தேன். எப்படித் தப்பிக்கலாம் என்று மனம் பல்வேறு வழிகளை யோசிக்க ஆரம்பித்தது.

“என்ன செய்கிறீர்கள் ? ”

“ரைட்டர் ”

“ஓ...ரைட்டர் ! ”

நல்ல வேளை, தமிழர்களைப் போல் ‘ எந்த போலீஸ் ஸ்டேஷன் ? ‘ என்று கேட்கவில்லை. ஆனால் வேறு விதமாக ஆரம்பித்து விட்டார் சேட்.

“என்ன எழுதுவீர்கள் ? துப்பறியும் நாவலா, மர்ம நாவலா ? சமூகமா, அரசியலா? ”

“எல்லாம் எழுதுவேன் ” என்று சொல்லி வைத்தேன். ஆனால் அவரோ அடுக்கடுக்காய் இதே போல் நூறு, இரு நூறு கேள்விகளை வைத்திருந்தார் போலிருக்கிறது. எடுத்துச் சரமாரியாய் வீச ஆரம்பித்தார்.

‘குஜராத், இமாசலப் பிரதேசம், திரிபுரா என்று கண்காணாத இடங்களிலிருந்தெல்லாம் வந்து டார்ச்சர் கொடுக்கிறார்களே! ’ என்று எண்ணியபடி அங்குமிங்கும் விழித்தேன். நல்ல காலமாக அவரது சகதர்மினி வந்து சேட்ஜீயை அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

அவர் இடம் காலியாக இருந்தது. யார் வந்து அமரப் போகிறார்களோ என்ற கவலையுடன் இருந்தேன். நல்ல வேளையாக அங்கே வந்து அமர்ந்தார். என் ஷட்டகர்(மைத்துனரின் கணவர்). ஷட்டகர் என்னை மாதிரி. அதிகம் பேச மாட்டார்.

ஆனால் நமக்கென்று ஒரு சாபம் இருக்கிறதே, அது வேலை செய்யும் அல்லவா?

ஆரம்பித்தார் ஷட்டகர். ” உங்களை மாதிரி தான் நானும்.... ”

“ அப்படியா, எப்படி ? ”

“ எப்போதும் படித்துக் கொண்டேதான் இருப்பேன் ”

“ ஓ... என்ன படிப்பீர்கள் ? ”

“ குமுதம், விகடன் ..... “

மேலும் அவ்ர் சொன்னதையெல்லாம் எழுதினால் நீங்கள் என்னை அடிக்க வந்து விடுவீர்கள். அதனால் சுருக்கமாகத் தருகிறேன்.

படிப்புதான் எனக்கு உயிர். கல்லூரியிப் பருவத்திலெல்லாம் நான் படிக்காத புத்தகமே கிடையாது. புத்தக்ப் புழு. எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பேன். இப்போதெல்லாம் எங்கே சார் படிப்பதற்கு நேரம் கிடைக்கிறது ? மனைவி குழந்தை என்று ஒரே பிரச்சினை. படிக்க வேண்டும் சார். படிப்பு தான் வாழ்க்கை. கல்லூரியில் படிக்கும் போது கவிதை கூட எழுதுவேன் தெரியுமா ? உங்களைப் போலவேதான் நானும். புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழேயே வைக்க மாட்டேன்.

அந்த நேரம் பார்த்து என் மைத்துனி வந்தாள். எந்த மைத்துனியுடனும் நான் ஹலோ என்ற வார்த்தைக்கு மேல் அடுத்த வார்த்தை பேசியதில்லை. அதுவும் இந்த மைத்துனியிடம் – கடைசி மைத்துனி – ஹலோ கூட சொல்ல மாட்டேன். லேசாக ஒரு முறுவல். அவ்வளவுதான். (அழகிகளோடு எதற்கு வம்பு என்று தான்).

இது மரணம் நிகழ்ந்த வீடு. இந்த இடத்தில் சம்பிரதாயமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எங்கள் அருகே வந்து அமர்ந்த மைத்துனியிடம் “ என்ன, உங்கள் கணவர் பயங்கரமாகப் படிப்பாராமே ? “ என்றேன்.

” ஐயோ.... புத்தகத்தை எடுத்து விட்டார் என்றால் அப்புறம் கிட்டத்தில் நெருங்கவே முடியாது “ என்றாள்.

பிறகு தன் கணவரிடம் “ எப்போ ஊருக்கு ? “ என்றாள்.

அவர் மிக அடங்கின குரலில், “ இன்னிக்கு நைட் “ என்றார். அவரும் அவளிடம் பேசும் போது என்னைப் போலவே தலையைத் தாழ்த்திக் கொண்டு ஏதோ ஒரு அந்நியருடன் பேசுவதைப் போல் பேசியதை கவனித்தேன்.

உடனே எழுந்து போய் விட்டாள் மைத்துனி. ஷட்டகரும் பழைய படி சகஜ நிலைக்குத் திரும்பி வந்து மீண்டும் ஆரம்பித்தார்.

“ சீரியலுக்கெல்லாம் எழுதுவதில்லையா ? “

“ சே சே... அதெல்லாம் பக்கா கமர்ஷியல். நான் எழுதுவது சீரியஸ் “

“ சீரியஸ்னா ? “

“ லிட்ரேச்சர் “

” எனக்கு கூட லிட்ரேச்சர் என்றால் உயிர். காலேஜ் படிக்கும் போது லிட்ரேச்சர்தான் எப்போதும். ஹேமா ஆனந்த தீர்த்தன், தமிழ் வாணன், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன்..... அதிலும் அந்த சாண்டில்யன் இருக்கிறாரே, பக்கம் பக்கமாய் என்னமாய் வர்ணிப்பார் மனுஷன். ... அடடா... இப்போது எங்கே சார் நேரம் கிடைக்கிறது.... மனைவி, குழந்தை என்று ஒரே பிரச்சினை..... ”

” ........................ “

“ சினிமாவுக்கு எழுதுவதில்லையோ ? “

“ ரஜினி, கமல், ஷங்கர் என்று எல்லோரும் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நான் தான் ஒரேயடியாக மறுத்து விட்டேன் “ (சும்மா கப்ஸா)

“ அட, என்ன சார் நீங்க ? சுஜாதா பெரிய ஆளானதே ஷங்கர் படத்துல எழுதித்தானே சார். எழுதுங்க சார்.... ”

இப்படியே இந்த உரையாடல் ஒரு மணி நேரம் தொடர்ந்தது.

அவர் நகர்ந்ததும் அந்த இடத்தில் வந்து அமர்ந்தாள் ஷட்டகரின் மகள் பூஜா.

“ என்ன கிளாஸ் படிக்கிறே செல்லம் ? “ என்றேன் பூஜாவிடம்.

“ ஐயோ, என்ன பெரீப்பா இது ? இதோட ஒரு 30 பேர் இதே கேள்வியைக் கேட்டுட்டா.... இப்போ நீங்க ! சரி. சொல்றேன். செகண்ட் ஸ்டாண்டர்ட் “

“ ஓ... ஐ ’ ம் ஸாரி செல்லக் குட்டி. இனிமே யார்ட்டேயும் இந்தக் கேள்வியைக் கேட்கலே, சரியா ? “

“ நோ... நோ... எல்லார்ட்டயும் கேளுங்க. என்கிட்ட மட்டும் கேட்காதீங்க “


Date : 26.03.2008


Courtesy : http://www.charuonline.com/


வெள்ளிப் பாத சரம்

திரும்பவும் ஆரம்பமாகிவிட்டது அதே பழைய பிரச்சினை. உயிர்மை போன்ற பத்திரிக்கைகளில் எழுதும் போது எனக்கு ஒரு தனிமை வாய்க்கப் பெற்றது. அம்மாதிரி பத்திரிக்கைகளில் எழுதும் போது வாசகர்களுக்கும் எனக்கும் ஒரு நீண்ட இடைவெளி இருந்தது. என்னைப் போன்ற reclusive – ஆன எழுத்தாளனுக்கு அது மிகுந்த பல நன்மைகளைச் செய்துள்ளது. ஆனால் இப்போது இணைய தளத்தில் எழுத ஆரம்பித்து விட்டதால் ஆளாளுக்கு அறிவுரை செய்யக் கிளம்பி விடுகிறார்கள்.

பல அன்பர்களின் அறிவுரை, ஜெயன் மாதிரி ஆட்களுக்கெல்லாம் இவ்வளவு நீண்ட பதில் எழுதி என் சக்தியை வீணடித்துக் கொள்ள வேண்டுமா என்பது.

என்னைப் பற்றிய அவதூறுகளுக்கு பொதுவாக நான் பதில் கூறுவதில்லை. ஜெயனின் அராஜகத்தை கடந்த 5 வருடங்களாக நான் மன்னித்து வந்தேன். நேசக்கரமும் நீட்டினேன். ஆனால் அந்த ஆள் கத்தியை மறைவாக வைத்திருந்தார். பாவம், என்னிடம் உள்ள கவசம் பற்றி அவர் அறியவில்லை. அவருடைய கத்தி அவரையே குத்தி விட்டது.

ஜெயன் போன்ற ஆட்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் நான் ஒரு நோயாளியாகத்தான் ஆகியிருப்பேன். இல்லாவிட்டால் அவரது பெற்றோரைப் போலவும், அவரது நண்பனைப் போலவும் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். மற்றவர்களைத் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு விஷம் தோய்ந்த வார்த்தைகளை எழுதித் தள்ளுபவர் ஜெயன்.

நான் எப்போதும் காலை நான்கு மணிக்கே எழுந்து கொள்ளும் வழக்கம் உடையவன். இப்போதெல்லாம் கெட்ட கனா வந்து நடுநிசி ஒரு மணிக்கே உறக்கம் கலைந்து விடுகிறது. கெட்ட கனா என்றது ஜெயனை. எனவே, நான் ஜெயனுக்கு பதிலும் எழுதாமல் போனால் சட்டையைக் கிழித்துக் கொண்டு தான் அலைய வேண்டியிருக்கும்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டும் இயேசுவைப் போல் வாழ்வதற்குத் தான் ஆசையாக இருக்கிறது; ஆனால் முடியவில்லையே?

பார்த்தீர்களா, உங்களுடைய ஆலோசனை மற்றும் அறிவுரையின் காரணமாக மேலும் சில பக்கங்களை ஜெயனுக்காக ஒதுக்க வேண்டியதாகி விட்டது.

மேலும், ஜெயனுக்கு நான் எழுதிய பதிலை ஏன் ஒரு பதிலாகப் பார்க்கிறீர்கள்? அதில் ஷேக்ஸ்பியரைப் பற்றி எழுதியுள்ள குறிப்பை போல் பல விஷயங்கள் உள்ளனவே, அதை ஏன் காணத் தவறுகிறீர்கள் ?

அடுத்த விஷய்ம், பண உதவி. பல அன்பர்கள் எழுதியுள்ளனர். பண உதவி தவிர வேறு எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று.

உங்கள் அனைவருக்கும் என்னுடைய ஒரே அன்பான வேண்டுகோள் : முடிந்தால் உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் எனக்கு விளக்கமெல்லாம் எழுதி என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்.

மற்றவர்களிடம் பண உதவி கேட்பதைப் போல் ஈனத்தனமான காரியம் வேறு எதுவுமில்லை. அதை நான் செய்து கொண்டிருக்கிறேன். தயவு செய்து என்னை மேலும் மேலும் பிச்சைக்காரனைப் போல் உணரச் செய்யாதீர்கள்.

நான் பிச்சைக்காரனாக வளர்வதற்கு தமிழ்ச் சூழல் மட்டுமே காரணம். என்னுடைய நாவல் 250 பிரதிகள் மட்டுமே விற்பனையாகியிருக்கிறது. ஒரு துருக்கி எழுத்தாளனின் நாவல் 1 லட்சம் பிரதிகள் விற்கின்றன. புரிகிறதா பிரச்சினை ?

15 ஆண்டுகளுக்கு முன்பு சில காலம் ஜேப்படித் திருடனாக வாழ்ந்திருக்கிறேன். ஒரு முறை பிளேட் போட்டபோது 3 பவுன் தங்கச் சங்கிலி கிட்டியது. அதை விற்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஊரிலுள்ள சேட்டுகள் அனைவருமே என் முகத்தைப் பார்த்ததும் கண்டு பிடித்து விடுவார்கள். வாங்கிக் கொள்ள மறுக்க மாட்டார்கள். ஆனால் 3 பவுன் சங்கிலியை 1 பவுன் விலைக்குக் கேட்பார்கள்.

இப்போது மீண்டும் நான் அந்தப் பழைய வாழ்க்கைக்குள் செல்ல முடியுமா, சொல்லுங்கள் ?

பனகல் பார்க்கில் எத்தனையோ நாட்கள் பல நாள் பட்டினியுடன் படுத்துக் கிடந்திருக்கிறேன். அடுத்த வேளை சோறு எப்போது கிடைக்குமோ என்ற நிச்சயமில்லாமல் பட்டினி கிடப்பதைப் போன்ற ஒரு கொடுமை வேறு எதுவும் இல்லை. ஒரு நாள் ஒரு நாய், காய்ந்து வறட்டி போல் ஆகி விட்ட மனித மலத்தைத் தின்று கொண்டிருந்தது. அந்த நாய்க்கும் எனக்கும் அப்போது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இப்போதும் என்னுடைய நிலை அதுதான். ஒரே வித்தியாசம். என்னை இப்போது பலருக்கும் அடையாளம் தெரிகிறது. எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது.

எனவே, திரும்பவும் சொல்கிறேன். எனக்கு உங்களுடைய ஆலோசனை அறிவுரை எதுவும் தேவையில்லை.

பண உதவி செய்ய முடியாதது பற்றிக் குறிப்பிட்டு தயவு செய்து மின்னஞ்சல் செய்யாதீர்கள். முடிந்தால் உதவி செய்யுங்கள்.

ஒரு அன்பர் குறிப்பிட்டார், ‘ நானும் உங்களைப் போல் தான் சாரு ‘ என்று. அதாவது, அவருடைய நிதி நிலைமையும் என்னைப் போல்தான் உள்ளதாம்.

எனக்கு மனசில் ஒரு விஷயம் தோன்றியது. ‘ நான் மாமா வேலை செய்திருக்கிறேன்; நீர் செய்திருக்கிறீரா ? ‘. கேட்கவில்லை. காரணம், அவர் என் நண்பர்.

* * *

இவ்வளவு பிரச்சினைக்கிடையிலும் வாழ்க்கை படு சுவாரசியமாகவும், ரசிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

நான் குடித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு விஷயம். நண்பர் சுதேசமித்திரன் சென்னை வந்திருந்தார். நான் நண்பர்களைச் சந்திக்கும் இடம் பார்க் ஷெரட்டன். நிக்கியின் புண்ணியத்தால் காசு கொடுக்க வேண்டியதில்லை. பில்லை அவர்கள் நிக்கிக்கு அனுப்பி விடுவார்கள்.

பார்க் ஷெரட்டன் எனக்குத் தாய் வீடு மாதிரி. கைத்தொலைபேசியை மறந்து விட்டு வந்து விட்டால் மறு நாள் கொண்டு வந்தே கொடுப்பார்கள்.

ஆனால் மித்திரனோ ஷெரட்டன் வேண்டாம்; டாஸ்மாக்கே போதும் என்றார். சிறுபத்திரிக்கைக்காரர். அப்படித்தான் இருப்பார் என்று போனேன்.

மறு நாள் பார்த்தால் கண்ணாடியைக் காணோம். கண்ணாடி விலை 20,000ரூ. Boss என்ற ப்ராண்ட். பதறிப் போய் டாஸ்மாக்குக்குப் போனேன். பொடியன்கள் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் எடுத்து வைத்திருப்பார்கள். டாஸ்மாக்கிலிருந்து வீட்டுக்கு வர ஆட்டோ கிடைக்காததால் நடந்தே வந்திருக்கிறேன். சிறிது தூரம் தான். வழியில் விழுந்திருக்கிறது என்று புரிந்தது.

ஒரு பொடியன் ‘ இருங்கண்ணே ‘ என்று கூறி உள்ளே போய் வேறொரு கண்ணாடியை எடுத்து வந்து கொடுத்து போட்டுப் பார்க்கச் சொன்னான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு யாரோ விட்டுப் போனதை எடுத்து வைத்திருக்கிறான் பொடியன். கண்ணாடியைத் தொலைத்தவர் வந்து கேட்கவில்லை.

அடுத்த கண்ணாடி வாங்கும் வரை போட்டுக் கொள்ளலாம் என்று முயற்சி செய்தேன். பொருந்தவில்லை.

கிளம்பும்போது பொடியனிடம் 10ரு.கொடுத்தேன். மறுத்து விட்டான்.

“ என்னாண்ணே, நீங்களே கண்ணாடியைத் தொலைச்சுட்டு நிக்றீங்க. உங்க கிட்ட போய் பணம் வாங்குறதா ? “ என்றான்.

தினம் காலை 10 மணியிலிருந்து இரவு ஒரு மணி வரை அசராமல் வேலை செய்யும் பத்து வயதுச் சிறுவனின் வார்த்தைகள் அவை. இந்த வார்த்தைகளைக் கேட்பதற்காகவே இன்னும் எத்தனை கண்ணாடிகளை வேண்டுமானாலும் தொலைக்கலாம் போல் இருந்தது.

மற்றொரு சம்பவம் சமீபத்தில் சேட்டு கடையில் தாலியை விற்ற போது நடந்தது. என் நண்பர் ஒருவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. பெயர் வைக்கும் வைபவத்துக்குச் சென்றிருந்தேன்.

வெறும் கையுடன் கிளம்பிய போது அவந்திகாவிடம் சொன்னேன். “ கையில் காசு இருந்திருந்தால் பாப்பாவுக்கு ஒரு கொலுசு வாங்கலாம் “

சேட்டு கடையில் தாலியை விற்றுப் பணத்தை வாங்கி எண்ணிக் கொண்டிருந்த போது அவந்திகா மலர்ந்த முகத்துடன் என்னிடம் சொன்னாள்: “ சாரு, பாப்பாவுக்கு ஒரு கொலுசு வாங்கி விடலாமே ? “

Date 25.03.2008

Courtesy : - http://www.charuonline.com



தலைஎழுத்து

காதல் என்பது காக்கா ஆய் மாதிரி
யார் மேல எப்ப விழும்னு சொல்ல முடியாது .
அதை தொடைச்சுட்டு போறதும்
நக்கி பாக்குறதும் அவன் அவன் தலைஎழுத்து .

புனரபி ஜனனம் புனரபி மரணம்

on Sunday, March 29, 2009

எனக்கு இந்த பூலோகத்தில் உள்ள 107 திவ்ய தேசங்களையும் தரிசித்து விட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நான் இப்போது ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவனாகி விட்டதால் ஏற்பட்ட திடீர் ஆசை அல்ல இது. நான் நாத்திகனாக இருக்கும் போதேகூட வழிபாட்டு ஸ்தலங்களை நோக்கித்தான் சென்று கொண்டிருப்பேன். 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஜம்முவிலுள்ள வைஷ்ணவோ தேவி கோவிலுக்கு 10 மணி நேரத்துக்கு மேல் மலை மீது ஏறிச் சென்றிருக்கிறேன்.

இப்போது சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கலுக்கும் , சென்னைக்குப் பக்கத்திலுள்ள இலவம்பேடுக்கும் செல்ல ஆசை. காரணம் ஒரு கதை. விஷ்ணுவின் மகனான மன்மதனை சிவன் எரித்து விட்ட கதையை நாம் அறிவோம். பின்னர் கிருஷ்ணாவதாரத்தில் மன்மதன் பிரத்யும்னன் என்ற பெயருடன் கிருஷ்ணனின் மகனானப் பிறந்தான்.பிரத்யும்னனின் மகன் அநிருத்தன். இவன் மீது பானாசுரனின் மகளான உஷை காதல் கொள்கிறாள். ஆனால் அவனை நேரில் பார்த்ததில்லை. கனவிலேயே உருவான காதல் அது. தான் கனவில் கண்ட உருவத்தை சித்திரக்காரியான தன் தோழி சித்ரலேகாவைக் கொண்டு வரையச் செய்கிறாள் உஷை. சித்ரலேகாவுக்கு மாய வித்தையும் தெரியும். அநிருத்தன் உறக்கத்தில் இருக்கும்போது அவனே அறியாமல் அவனை உஷையிடம் தூக்கிக் கொண்டு வந்து விடுகிறாள் சித்ரலேகா.

பனாசுரனுக்கு இது தெரிந்து அநிருத்தனை சிறையில் தள்ளி விடுகிறான். இதை அறிந்த கிருஷ்ணன் பானாசுரனிடம் போரிட்டு தன் பேரனை சிறையிலிருந்து மீட்டு வந்து உஷைக்கும் அவனுக்கும் மணம் செய்து வைக்கிறான். அத்திருமணம் நடந்த இடம்தான் திருத்தங்கல்.

கிருஷ்ணன் அநிருத்தனை மீட்டு வரும்போது அந்த சந்தோஷத்தில் இலவம் என்ற வனத்தில் பேடு என்ற கூத்தை ஆடினானாம். அதுதான் இலவம்பேடு. சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரிக்கும் மீஞ்சூருக்கும் இடையில் இருக்கிறது இலவம்பேடு.

யாராவது உடன் வருகிறீர்களா , சென்று வரலாம் ? ( பெண்களாக இருந்தால் வேண்டாம் , அடியேனை மன்னித்து விடுங்கள்).

***

இரண்டு நாள் தொடர்ந்தாற்போல் இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் பலவிதமான எதிர்வினைகளைச் சந்தித்தேன்.

" ஏன் அவந்திகாவைப் பார்க்காமல் , ஷர்மியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் ?" ( அந்த நிகழ்ச்சியில் என்னோடு அவந்திகாவும் கலந்து கொண்டிருந்தாள்).

பாலியல் தொழிலாளிகளுடன் உங்களுக்கு உள்ள அனுபவங்கள் பற்றி ரோஸ் கேட்ட போது ஏன் அசட்டுத் தனமாக சிரித்து , திருதிருவென்று முழித்தீர்கள் ?

- இதே ரீதியில் ஒரு 50 கேள்விகளைக் கேட்டார்கள் நண்பர்கள்.

' எடிட்டிங் ' என்று ஒரு விஷயம் இருப்பதையே நண்பர்கள் மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். ரோஸின் கேள்விக்கு என்னுடைய பாங்காக் அனுபவங்களை நான் விரிவாகவே பேசினேன். ஆனால் அது எல்லாமே எடிட் செய்யப்பட்டு விட்டது. ஏனென்றால் , ஒரு பாலியல் தொழிலாளி எவ்வளவு வெளிப்படையாகவும் பேசலாம் ; ஆனால் ஒரு ' கௌரவமான் ' பிரமுகர் அப்படியெல்லாம் பேசிவிடக் கூடாது என்று எழுதப்படாத ஒரு சமூக விதி இங்கே நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் விஜய் தொலைக்காட்சியை பாராட்டித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் இது வரை ஒரு பொது நிகழ்ச்சியில் யாராவது ' ஒருவனுக்கு ஒருத்தி என்பது சுத்தப் பொய் ' அது ஒரு ஏமாற்று வேலை ' என்று சொல்லியிருக்கிறார்களா ? பெரியாருக்கு அடுத்தபடியாக இதைச் சொன்னவன் அடியேன்தான் என்று நினைக்கிறேன்.

மற்றொரு நண்பர் கேட்டார். ' உங்களைப் போன்றவர்களெல்லாம் இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாமா ?' என்னுடைய நாவல் 250 பிரதிகள் மட்டுமே விற்றுக் கொண்டிருக்கும் வரை நான் இது போன்ற காரியங்களைச் செய்து கொண்டுதான் இருப்பேன். இப்படியெல்லாம் செய்தாலாவது விற்பனை 250 பிரதிகளைத் தாண்டுகிறதா பார்க்கலாம் என்ற நப்பாசைதான் காரணம்.

( அந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணி வரை நடந்தது. ஆனால் எனக்கு ஒரு நயா பைசா தரவில்லை. 10, 15 தடவை போன் செய்து பார்த்து விட்டேன். இதோ அதோ என்கிறார்கள். எழுத்தாளன் என்றால் யார் வேண்டுமானாலும் ----------( censored) அடிக்கலாம் என்பது தமிழ் நாட்டின் தலைவிதி ஐயா , என்ன செய்வது ? இப்போது இதை வேறு எழுதித் தொலைத்து விட்டேனா ? இனிமேல் என்னை அழைக்கவே மாட்டார்கள். பரவாயில்லை. பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டுமே ? அது நானாக இருந்து விட்டுப் போகிறேன்.)

***

பிராமண சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளைப் பார்த்து நான் எப்போதும் வியப்படைகிறேன். உதாரணமாக , எஸ்பஞோல் வகுப்பில் என்னோடு படித்த நப்பின்னையும் நானும் வகுப்பில் அடித்த லூட்டியைப் பார்த்து இருவரையும் அந்தப் பயிலகத்திலிருந்தே நீக்கி விட்டார்கள். வேறு என்ன ? கரோகே மூலம் ஷகீராவின் ' தோர்த்துரா ' (Torture) பாடலை நப்பின்னை பாட , நான் அதை ஆரவாரம் செய்து வரவேற்று ரகளை பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி விட்டு வைப்பார்கள் ?

சரி , வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட நான் எஸ்பஞோலை எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருக்க , நப்பின்னையோ எஸ்பஞோலை தானாகவே பயின்று , எஸ்பஞோல் ஆசிரியை தேர்விலும் தேர்ச்சி பெற்று , இப்போது பெல்ஜியத்தில் எஸ்பஞோல் ஆசிரியையாக இருக்கிறாள். அவள் ஸ்ரீவைஷ்ணவ இனத்தைச் சேர்ந்தவள்.

என் மாமனாரின் சுப ஸ்வீகார நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது-

அப்போது என் செவிகளில் தேனாகப் பாய்ந்த பிரபந்தங்களை - தென்குரு கூர்ச் சடகோபனின் திவ்ய வார்த்தைகளை என்னுடைய தட்டையான மொழியால் வர்ணிக்க முடியவில்லை. மன்னித்து விடுங்கள்.

நான் திவ்யப் பிரபந்தத்தை புத்தகத்தில் படிப்பதை விட நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். திருமங்கையாழ்வார் செய்த பெரிய திருமொழியை P. தெய்வ நாயகன் கோஷ்டியினர் சேவித்திருக்கின்றனர். குறுந்தகட்டில் கிடைக்கிறது. அதைச் செவிகளால் கேட்பது ஓர் அற்புதம். ஆனால் இறைவன் - பக்தி- ஆன்மீகம் என்பதிலுள்ள சத் விஷயங்களை நாம் எவ்வளவுதான் அனுபவித்தாலும் சோற்றினிடையே அகப்படும் கற்களை போல் சிலது அகப்பட்டு நம் பற்களை உடைக்கத்தான் செய்யும். அதுதான் மதத் துவேஷம். தான் வணங்கும் இறைவனே இறைவன் ; மற்றதெல்லாம் பேய் என்ற போக்கு எல்லா மத நம்பிக்கைகளிலும் உள்ளது. உதாரணமாக , திருவரங்கத்தமுதன் பாடிய இந்த ராமானுஜ அந்தாதியைப் பாருங்கள்:

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்

சொல்கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும்

நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் - நீள்நிலத்தே

பொன்கற்பகம் எம்ராமானுச முனி போந்த பின்னே.

காலை ஏழு மணியிலிருந்து மூன்று மணி நேரம் பிரபந்தங்கள் ஓதப்பட்ட பிறகு வேறு சில சடங்குகள் நடந்தேறின. பின்னர் குடும்பத்தினர் அனைவரையும் அமரச் செய்து ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார் வாத்தியார் . அதற்கு முன்பாக எல்லோருக்கும் ஒரு தோசையும் வெல்லமும் பரிமாறப் பட்டது.

கோபாலய்யங்காரின் நற்பண்புகளையும் , ஸ்தூல உருவில் அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் , சூக்ஷ்மரீதியாக அவர் நம்மோடேதான் இருக்கிறார் என்பதையும் , அவர் உயிர் பிரிந்த நேரம் உத்தராயனம் , சாயரட்சை ஐந்தே முக்கால் , பிதுர் தின அமாவாசை , மாசி மாதம் , வருண பகவான் அதிபதி யாயிருந்த தினம் , கிருஷ்ண பட்சம் - இவ்வளவு சுபயோகம் கூடிய தினத்துக்காகவே பீஷ்மர் உயிர் விடக் காத்திருந்தார் - அப்படியாகப் பட்ட ஒரு நாளிலே - அப்பபடியாகப் பட்ட ஒரு சமயத்திலே வைகுந்த பதவி யடைந்திருக்கிறார் என்பதையும் கதை போல விவரித்தார் வாத்தியார்.

***

12 ஆண்டுகளுக்கு முன்பு அவந்திகாவை நான் மணம் புரிந்து கொண்ட போது என்னுடைய வெளித் தோற்றத்தை வைத்து ' யாரோ ரவுடி ' என எண்ணியும் , முக்கியமாக என் சாதி (எஸ்) காரணமாகவும் அவள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் எங்கள் திருமணத்துக்கு வராமல் புறக்கணித்து விட்டனர். பிறகு நான் அவந்திகாவை வைத்துக் கொண்டாடிய பாங்கையும் , அவளுக்குச் செய்த சிசுரு ¨ க்ஷகளையும் பார்த்து விட்டு ஒருநாள் என் மாமனார் தன் இரு கைகளையும் கூப்பி "நீங்கள் தெய்வம்" என்றார். "பெரியவர் நீங்கள் அப்படியெல்லாம் சொல்லக் கூடாது" என்று கூறி அவர் பாதங்களைத் தொட்டு வணங்கி "அவந்திகா ஒரு தெய்வ மனுஷி" என்றேன்.

பிறகு என்னுடைய ஸீரோ டிகிரி நாவலுக்கு பதிப்பாளர் யாரும் கிடைக்காமல் , நானே அதைப் பதிப்பித்து , நானே அதைத் தெருத் தெருவாக சுமந்து சென்று விற்ற போது (அப்போதெல்லாம் என் தோள் பையில் எப்போதும் ஒரு 5 பிரதி ஸீரோ டிகிரி பிரதிகள் இருக்கும்) , அந்நாவல் பற்றி வார மலரில் அந்துமணி விரிவாக எழுதியிருந்ததால் சுமார் 700 பிரதிகள் மணியார்டர் மூலமாகவே விற்றது. தினமும் 50 மணியார்டர் வரும். எதிலுமே அனுப்பியவரின் விலாசம் நமக்குக் கிழித்துத் தரும் பகுதியில் எழுதப் பட்டிருக்காது. என் மாமனார்தான் அவ்வளவையும் தனித்தாளில் எழுதி வைத்திருந்து என்னிடம் கொடுப்பார். தபால்காரர் தன் வேலை முடிந்து திரும்பிச் செல்லும் போது அந்த மணியார்டர் படிவங்களை என் மாமனாரிடமிருந்து வாங்கிக் கொண்டு போவார்.

ஸ்ரீவைஷ்ணவ இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிறவியிலேயே ஓர் அதீதமான புத்திசாலித்தனம் உண்டு. இந்த புத்தி சிலரிடம் சிருஷ்டிகரமாகவும்(சுஜாதா) , ிலரிடம் சித்தப் பிரமையாகவும் (என் மாமியார்) , சிலரிடம் மனிதாபிமானமாகவும் , சேவை மனோபாவமாகவும் (அவந்திகா) , சிலரிடம் வக்கிரமாகவும் வெளிப்படும்.

என் மாமனார் சென்ற ஆண்டே சென்றிருக்க வேண்டியது. ஒரு வருடம் போனஸாகக் கிடைத்தது DXN என்ற சிவப்புக் காளான் மாத்திரைகளால்தான். காளான்களில் மொத்தம் 3000 வகை உண்டு. இவற்றில் நாம் உண்ணத் தகுந்தவை 300. அதிலும் மிகச் சிறப்பானவை ஏழுவித காளான்கள். அந்த ஏழில் ஆகச் சிறந்தது சிவப்புக் காளான். இந்தச் சிவப்புக் காளானின் தாவரவியல் பெயர் Genoderma Lucidum. சீன மொழியில் Reishi. உலகிலேயே அதிக ஆயுளுடன் வாழ்வது சீனர்கள்தான் ( 90 வயது) என்பதற்கு ஒரு முக்கிய காரணம் , அவர்கள் உணவில் சிவப்புக் காளானைச் சேர்த்துக் கொள்வதுதான்.

சிவப்புக் காளான் மருந்து அல்ல ; உணவு என்பதால் ஒருவர் என்னவிதமான மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் சிவப்புக் காளான் கேப்ஸ்யூல்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். எவ்விதப் பத்திய முறிவையும் அது ஏற்படுத்தாது.

ஆனால் மாதம் 2000 ரூ. ஆகும் , அதற்கு என் நிதி நிலைமை ஒத்துக் கொள்ளாது என்பதால் நான் அதைச் சாப்பிடுவதில்லை. ஆனால் அவந்திகாவுக்கு வாங்கித் தருகிறேன். தியாகம் என்றெல்லாம் நினைத்து விட வேண்ட்டாம். பச்சை சுயநலம்தான் காரணம். அவளுக்கு நீண்ட காலமாக ஒரு பிரச்சினை இருந்து வந்தது. பால் , பழம் , கீரை தவிர வேறு எதுவும் ஒத்துக் கொள்ளாது. சோறு , சாம்பார் , ரசம் , சப்பாத்தி , தயிர் என்று எதைச் சாப்பிட்டாலும் ஏப்பம் வந்த வண்ணமாகவே இருக்கும். நிற்கவே நிற்காமல் மணிக்கணக்கில் தொடர்ந்து , ஒரு கட்டத்தில் மூச்சு விடவே சிரமமாகி பயமுறுத்திவிடும். எந்த நேரமாக இருந்தாலும் உடனே மருத்துவமைக்கு ஓட வேண்டும்.

எத்தனை காலத்துக்குத்தான் ஒருவர் வெறும் பழங்களையும் , ப்ரெட்டையும் சாப்பிட்டு வாழ்வது என்று தப்பித் தவறி எதையாவது வாயில் போட்டு விட்டால் தீர்ந்தது கதை. அலோபதி , ஆயுர்வேதம் , ஹோமியோபதி , சித்த வைத்தியம் என்று எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. எதிலுமே குணமாகவில்லை. சிவப்புக் காளான் சாப்பிட்டு நின்று விட்டது. இப்போது அவள் வீட்டில் சமைத்த எதையும் சாப்பிடுகிறாள். இந்தப் பிரச்சினை என்று மட்டும் அல்ல. சிவப்புக் காளான் ஒரு சர்வரோக நிவாரணி என்பது என் முடிவு.

சென்ற ஆண்டு தேக ஆரோக்கியம் குன்றி படுத்த படுக்கையாகக் கிடந்த என் மாமனாருக்கு சிவப்புக் காளானைக் கொடுக்கச் செய்தேன். கேப்ஸ்யூல்களை விழுங்க முடியாமல் அதைப் பிரித்து நீரில் போட்டுக் கலக்கிக் குடித்தவர் எழுந்து உட்கார்ந்து , ஓரிரு நாளில் நடமாடவும் ஆரம்பித்து விட்டார்.

ஆறு மாதம் படுக்கையில் கிடந்த அவர் எழுந்து வந்து வீட்டுக்கு வெளியேயுள்ள மாடிப் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார். அவர் வீட்டு வாகன ஓட்டுனர் தாத்தாவை அந்த நிலையில் பார்த்து ஆச்சரியமுற்று ' குட் மார்னிங் சார் ' என்று சொல்ல , அதற்கு என் மாமனார் சொன்ன பதில்: "உன் குட் மார்னிங்கை எல்லாம் நீ ஜால்ரா அடிக்கிறியே , அங்கே போய்

சொல்லு...குட் மார்னிங்காம் , குட் மார்னிங்..."

அதிபுத்திசாலித்தனம் வக்கிரமாக மாறும் என்று சொன்னேன் அல்லவா , அந்த வகை மேலே கண்டது.

நான் சின்மயா நகர் என்ற குப்பைக் காட்டில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்ததன் காரணம் , அவந்திகா தன் பெற்றோருடன் , அவர்களின் அருகில் இருக்க விருப்பப்பட்டதுதான்.

ஏதாவது விசேஷமாகச் செய்தால் (கேசரி இத்யாதி) அதை சுடச் சுட எடுத்துக் கொண்டு அப்பாவிடம் ஓடுவாள். (அடுத்த தெருதான் அவர்கள் வீடு). ஒருநாள் அவந்திகாவிடம் கேட்டேன் , உன்னை இந்தப் பாடு படுத்தியிருக்கிறாரே , அவருக்கு ஏன் நீ இப்படி ஓடி ஓடிச் செய்கிறாய் ? (18 வயதுப் பெண்ணை தெருவில் போட்டு அடிப்பாராம்) அதற்கு அவள் ஒரு அருமையான பதிலைச் சொன்னாள். "என் அம்மாவுக்கு மனநிலை பிறழ்ந்த போது அவளுக்கு 25 வயதுதான் இருக்கும். ஆனாலும் அவளை விட்டு விட்டு ஓடி விடாமல் , வேறு திருமணம் செய்து கொள்ளாமல் என் அம்மாவுடனேயே 55 வருடம் வாழ்ந்தாரே , அதற்கு ஈடு இணை ஏதாவது உண்டா ? அதற்காகத்தான் இவ்வளவும்."

உண்மைதான். கோபாலய்யங்காரும் , அவரது தர்ம பத்தினி வைதேகி அம்மாளும் எலியும் பூனையுமாகச் சண்டை போட்டுக் கொள்வார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் பிரியவே மாட்டார்கள். வைதேகி அம்மாள் இறந்து இரண்டு ஆண்டுகளில் கோபாலய்யங்காரும் கிளம்பி விட்டார்.

***

என் குழந்தை , என் ரத்தம் என்ற பந்த பாசங்களை உதறி எறிந்தவன் நான் என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எளிதில் பின்பற்ற முடியாத , மிகவும் சிரம சாத்தியமான ஒரு பண்பு அது. ஆனால் , அதைப் பின்பற்றுவதால் எனக்குக் கிடைத்த லாபம் , எல்லா குழந்தைகளையுமே என் குழந்தைகளாக நினைக்கும் மனோபாவம். அப்படி எனக்கு வந்து சேர்ந்த குழந்தைதான் பூஜா. அவளும் அதே தீர்மானத்தோடுதான் என்னோடு பழகுவாள். நாங்கள் முதன்முதலாகச் சந்தித்தபோது அவள் வயது மூன்று. ஒருநாள் கூடத் தவறாமல் தினமும் அவளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்பது எனக்கு அவள் இட்டிருந்த உத்தரவு. பார்க்காத நாட்களில் ஸீரோ மார்க் போட்டு விடுவாள்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் என் புத்திர செல்வங்களைப் பற்றிக் கேட்ட போது பூஜாவைப் பற்றிச் சொல்ல மறந்து போனேன். அந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு பூஜா ஒரு வார காலம் என்னோடு பேசவில்லை.

ஏதோ முந்தின ஜென்மத்து அறிவையும் , ஞானத்தையும் கூடவே எடுத்துக் கொண்டு வந்தவள் போல் பேசுவாள் பூஜா.

மற்றொரு மைத்துனியின் புத்திரன் அஜிதன். அந்த குஜராத்தி சேட்டுடன் அஜிதனும் பூஜாவும் இந்தியில் பிளந்து கட்டிக் கொண்டிருந்தார்கள். பூஜா ஐந்து வயதிலேயே தமிழ் , ஆங்கிலம் , இந்தி மூன்றிலும் சக்கை போடு போடுவாள். அஜிதன் ஏழாம் வகுப்பு படிக்கிறான். ஆனால் ஐந்தடி ஏழு அங்குல உயரம் இருப்பான்.

அவனிடம் "உனக்கு இந்தி தெரியுமா ?" என்று கேட்டேன்.

" ம்...கொஞ்சம் தெரியும்."

" எப்படி ?"

" ப்ரைவேட்டா படிச்சேன்."

" எதில் ?"

" இந்தி ப்ரச்சார் சபா."

" ஓ...என்னென்ன பரீட்சை பாஸ் பண்ணினாய் ?"

" விஷாரத் முடித்திருக்கிறேன்."

மிரண்டே போனேன். அதுவும் சென்ற வருடமே முடித்து விட்டானாம். விஷாரத் என்றால் புலவர் பட்டம்.

" பிரேம் சந்திலிருந்து இன்றைய நிர்மல் வர்மா வரை படிக்க வேண்டுமே ?"

" ஆமாம்" என்று சொல்லி , கோதான் , கர்ம பூமி , வர்தான் போன்ற அவரது நாவல்களைப் பற்றிப் பேசினான்.

" கோதான்...மறக்கவே முடியாத நாவல். அந்த ஹோரி ரொம்ப பாவம். கடைசியில் அவனுடைய சாவுக்கே அவன் மனைவி பசு தானம் செய்ய வேண்டி வருகிறதே ?" என்ற

அஜிதனுக்கு அந்த நாவலில் வரும் மிகச் சிக்கலான் சாதீய முரண்பாடுகள் பற்றியெல்லாம் புரிந்திருக்குமா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.

30 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த நாவல் அது. இந்திய கிராமீய வாழ்வு பற்றிய எத்தனையோ அஜால்குஜால் ரொமாண்டிக் ஜபர்தஸ்துகளுக்கிடையில் கிராம வாழ்விலிருக்கும் அசலான குரூரத்தையும் , அதனூடாகவே காணக் கூடிய அற்புதங்களையும் ஒருங்கே காட்டிய நாவல் கோதான்.

பிறகு , அஜிதன் முக்திபோதின் சாந்த் கே மூஹ் டேடா ஹை (நிலவின் முகம் கோணலாக இருக்கிறது) என்ற கவிதை பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். இந்தியின் நவ கவிதையை ஓர் உலுக்கு உலுக்கிய கவிதை அது.

" சமகால இலக்கியத்தில் எது பாடமாக இருந்தது ?" என்று கேட்டேன்.

" நிர்மல் வர்மாவின் ' பகல் நேரத்து விருந்தாளி ' என்ற சிறுகதைத் தொகுப்பு."

' பகல் நேரத்து விருந்தாளி ' என்ற அந்தச் சிறுகதையை எப்படி ஒரு பத்து வயதுச் சிறுவன் படிக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கணினியில் தேடிப் படித்துப் பாருங்கள். நான் சொல்வது புரியும்.

அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் - 12 ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய ஒரு பகல் நேரமும் அந்தக் கதையில் வருவதைப் போலவே கழிந்திருக்கிறது. அதே சூழ்நிலை , அதே வார்த்தைகள் , அதே மனிதர்கள்.

நிர்மல் வர்மா எப்படி என்னுடைய வாழ்வை உளவறிந்து எழுதினார் என்பது இன்று வரை எனக்குப் புரியாத புதிர். அதிலும் அச்சம்பவம் என் வாழ்வில் நடப்பதற்கு முன்பாகவே அவர் அச்சிறுகதையை எழுதி விட்டார்.

விஷாரத்-இலிருந்து இசைக்குத் தாவியது பேச்சு. அஜிதனுக்குப் பிடித்த பாடகன் எமினெம். கால் பந்தை கைகளால் தரையில் தட்டி விளையாடியபடியே எமினெம்மின் Mocking Bird பாடலின் சில வரிகளைப் பாடினான். அவனுடைய ஆங்கில உச்சரிப்பு அச்சு அசலாக அமெரிக்கப் பாணியில் இருந்தது. நாலு எழுத்து வார்த்தை வரும் அப்பாடலின் கடைசி

வரியையும் பாடுவானா என்பதைப் பார்க்க முடியாதபடி குறுக்கிட்டாள் பூஜா. இருவரும் சேர்ந்து ஒரு தமிழ்ப் பாட்டைப் பாடினார்கள். அவர்களாகவே இட்டுக் கட்டிய ஒரு நையாண்டிப் பாடல் அது. இருவரும் ராகத்தோடு பாடிய அந்தப் பாடலில் "எல்லய்சி பில்டிங்குல 14 மாடி ; அந்த மாடியில மாட்டிகிச்சு வள்ளூவரு தாடி" என்ற வரிகள் எனக்குப் பிடித்திருந்தது.

" என்னவாக விரும்புகிறாய் ?" என்று எல்லா குழந்தைகளிடமும் கேட்கப்படும் அந்த அசட்டுக் கேள்வியை நானும் அஜிதனிடம் கேட்டேன். (குழந்தைகளிடம் பேசுவதற்கான மொழி நம்மிடம் இல்லை என்றான் அலெக்ஸ் ஒருமுறை).

" ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியா தருகிறார்கள். அதனால் ரொம்பவே குழம்பிப் போயிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு அஸ்ட்ரொநாட் ஆகவே விருப்பம்" என்றான்.

விஷாரத் முடித்து விட்டதால் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து , திவ்யப் பிரபந்தம் கற்றுக் கொள்ளலாம் என்று பார்த்தால் இந்த சின்மயா நகரில் அதற்கான வாய்ப்பே இல்லை என்று வருத்தப் பட்டான்.

இருக்கும் நேரத்தை என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். விஷயம் என்னவென்றால் - பாடப் புத்தகங்களே அவனுக்குப் பிடிக்ககாது. வகுப்பில் கவனிப்பதோடு சரி. ( அதிலேயே முதல் மதிப்பெண்!) அதனால்தான் எக்கச்சக்கமாக நேரம் கிடைக்கிறது.

இதுதான் அஜிதன் பற்றிய சிறிய அறிமுகம்.

இதுவே என் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறதென்று பார்த்தால் - எங்கள் முன்னோர் வனங்களில் வேட்டையாடி வாழ்ந்தவர்கள். பின்னர் , வனங்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பில் வந்த பிறகு , அங்கே காலங்காலமாக வாழ்ந்து வந்த வனவாசிகள் அங்கிருந்து விரட்டப்பட்டு நகர்ப்புறங்களுக்கு வந்து சேர்ந்து கூலித்

தொழிலாளிகளாக மாறினர். பலர் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்தனர். மொழியும் மாறியது. எனக்குத் தெரிந்து என் உறவினர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் மலம் அள்ளித் திரிந்தவர்கள். அவர்களில் ஒரு சிலர் படித்து முன்னேறினோம். இப்போது என் நெருக்கமான உறவினர்கள் முன்னுக்கு வந்து விட்டார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை

எப்படியிருக்கிறது என்பதற்குச் சில உதாரணங்கள்:

ஒருநாள் என் கடைசித் தம்பி ரங்கன் சொன்னான். அவனும் நைனாவும் திருச்சிக்கு என் தங்கை வீட்டுக்குச் சென்ற போது என் தங்கையின் மகனும் என்னுடைய மற்றொரு தம்பியின் மகனும் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் ரங்கனின் மண்டையை அடித்துப் பிளந்து விட்டார்களாம். தலையில் எக்கச்சக்கமான தையல். பிழைத்ததே பெரிய காரியம்.

என்ன காரணம் ?

ரங்கன் தன் அக்காவிடம் கொடுத்திருந்த 10,000 ரூ. கடனைத் திருப்பிக் கேட்டானாம்.

சரி , என்னுடைய மற்றொரு தம்பியின் மகன் அங்கே எப்படி வந்தான் , அவன் சென்னையில் அல்லவா இருந்தான் ?

அது பெரிய கதையாம். ரங்கன் சொல்ல ஆரம்பித்தான்: அந்தப் பையன் இப்போது என் தம்பியின் வீட்டில் - அதாவது , தன் நைனாவிடம் - இல்லை. மூன்று வருடத்திற்கு முன்பு பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளையும் , 5000 ரூ பணத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டான். அப்போது அவன் பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பிறகு , ஆறு மாதம் கழித்து , இளைத்து உருமாறி பரதேசியைப் போல் வீட்டுக்குத் திரும்பியவனை சேர்த்துக் கொண்டார்கள். பிறகு மீண்டும் அதே போல் பீரோவை உடைத்து (இந்த முறை வலுவாகப் பூட்டி வைத்திருந்தார்கள்) 10 பவுன் நகையையும் 10,000 ரூ. பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். 2 வருடங்களாகிறது. திரும்பவில்லை. அவன்தான் அங்கே திருச்சியில் அக்கா வீட்டில் இருந்திருக்கிறான்.

" சரி , அவன் ஏன் கிரிக்கெட் மட்டையால் உன்னை அடித்தான் ?"

" அக்காவைத் திட்டினேன்."

" ஏன் ?"

" நானே வட்டிக்கு வாங்கிக் கொடுத்தேன். அதை அக்கா திருப்பிக் கொடுக்கவில்லை."

( ரங்கனுக்குப் படிப்பு வரவில்லை. அதனால் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்கிறான். தினக்கூலி ரூ. 100/-)

" நீயே சோத்துக்கு சிங்கியடிக்கிறாய் ; நீ ஏன் வட்டிக்கு வாங்கி கடன் கொடுத்தாய் ?"

ரங்கன் பதில் சொல்லவில்லை. இந்த உரையாடலில் invisible- ஆக வரும் என் மற்றொரு தம்பிக்கு ஒரு மகளும் இருக்கிறாள். நல்ல வேளையாக அவள் தன் அண்ணனைப் போல் ஆகவில்லை. ஏதோ ஒரு கல்லூரியில் மாலை நேர வகுப்பில் பி.காம். முதலாம் ஆண்டு படிக்கிறாள். பெயர் ஜனனி.

" உன் இ.மெயில் ஐ.டி. என்ன ?" என்று ஒருமுறை ஜனனியிடம் கேட்டேன்.

" கம்ப்யூட்டரை எல்லாம் சினிமாவில் பார்த்ததுதான்" என்றாள்.

" ஏன் , நெட் க · பே போக வேண்டியதுதானே ?"

" ம்ஹ ¥ ம். நைனா விட மாட்டாங்க."

" சரி , காலேஜ் நேரம் போக வேறு என்னதான் செய்கிறாய் ?"

" டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் இங்கிலீஷ் லோயர் படிக்கிறேன். யூஸாகும்னு நைனா சொன்னாங்க."

அவள் நைனா என்று குறிப்பிட்டது என் தம்பியை. தம்பியின் மாதச் சம்பளம் 70,000 ரூ.

எத்தனை அம்பேத்கர் வந்தாலும் இந்த அடிமைகளைத் திருத்தவே முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.

***

இது ஒரு மழை நாளின் முன்னிரவு நேரம். வெளியே மேகங்கள் அனுமதித்த மட்டில் கொஞ்சமாய்க் கொஞ்ச நேரம் தலை காட்டியது முழு நிலா. இரண்டு கவிஞர்களுக்கும் , என் தோழி ஒருவருக்கும் குறுஞ்செய்தி கொடுத்ததில் தோழி மட்டுமே பதில் அனுப்பினாள்: "பார்த்தேன். அற்புதம்.நன்றி."

22.3.2008.


Courtesy : http://www.charuonline.com/

ஓட்டு போடாமல் தப்பிக்கணுமா ........ இருக்கவே இருக்கு 49O

ஓட்டு போடாமல் தப்பிக்கணுமா ........ இருக்கவே இருக்கு 49O


தேர்தல் வந்துவிட்டது , இனி நாம் ஒவ்வொருவரும் வாக்களிக்கும் உரிமையை விட்டுகொடுக்காமல் நமக்கான வாக்கை சரியாய் பதிவு செய்ய கடமை பட்டுள்ளோம் .எனக்கு எந்த கட்சியும் பிடிக்கல,வேட்பாளரையும் பிடிக்கல அப்பிடின்னு பொலம்புறது கேட்குதுங்க ... அதுக்குதான் நம்ம சட்டத்துல இருக்கு அற்புதமான வழி அதுதான் 49 ஓ . அட என்னப்பா அது ?? சொல்லறேன் கேட்டுகோங்க ....

49 ஓ பதிவு செய்யும் முறை :

வாக்குச்சாவடிக்கு சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்து விட்டு, வாக்குச்சாவடி அதிகாரி நம்மிடம் ஒரு நோட்டில் கைஎழுத்து வாங்குவார்.பிறகு அடுத்த அதிகாரி நமது விரலில் மை வைப்பார்.மை வைத்தவுடன் , நாம் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை ,49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்ல வேண்டும். உடனே நாம் கைஎழுத்து இட்ட அதே நோட்டில் அந்த கைஎழுத்தின் பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கைஎழுத்து இட வேண்டும் இது தான் 49 ஓ வை பதிவு செய்யும் முறை. இதன் மூலம் நாம் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் நிரகாரித்த தாக தேர்தல் ஆணையம் நம் வாக்கை பதிவு செய்து கொள்ளும்.

"மகளிர் மட்டும்"

மகளிர் பள்ளி
மகளிர் கல்லூரி
மகளிர் மட்டும் பஸ்
மகளிர் விடுதி
என்றெல்லாம் பெண்களைத்
தனிமைப்படுத்தி,
தயார்ப்படுத்தி,
மணமுடித்து வைக்க -

ஆணைப் புரியாமல்
பெண்ணும்,
பெண்ணை பிரமிப்பாகப்
பார்க்கும் ஆணும்,
எதிர்பார்ப்புகள் வெவ்வேறாய்,
சிக்கலுடன்
தொடங்கும் வாழ்க்கை!

பெண்களை
இயல்பாய் பார்க்க ஆணும்,
ஆண்களுடன்
நட்புடன் பழக பெண்ணும்,
வாய்ப்பற்று இருப்பது
சிக்கல்களின் தொடக்கம்.

விலங்குகளும், பறவைகளும்
பால்பேதம் பார்ப்பதில்லை!
குழந்தைகளாக வளர்க்காமல்,
ஆண், பெண் என்று
ஆரம்பம் முதல் வளர்த்ததாலே,
உறவுச் சிக்கல்கள்;
பணியிடத்தில் குழப்பங்கள்.

பணியில் தொடங்கி,
பாராளுமன்றம் வரை
வந்துவிட்டபின்
பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல,
காவல் நிலையத்திலும்
தேவையில்லை,
மகளிர் மட்டும்.

"அரசியல் பிழைத்தோர்"

சமூகத்தில் ஒரு பாதி,
முப்பத்து மூன்று சதவிகித
இடங்களுக்காக,
போராடப் போகிறார்களாம்!

அவர்கள்
கேட்க வேண்டியது,
ஐம்பது சதவிகிதமல்லவா?

அரசியல் பெண்களின்
முகவரிகளை எல்லாம்
தொகுத்தபோதுதான்
தெரிய வந்தது,

அவர்கள்
தங்களுக்கென்று
தனி முகவரி மட்டுமல்ல,
முகமே இல்லாதவர்கள் என்பது!

அவர்கள்
பின் கதவு வழியாக
பினாமியாக வந்து
அரசியல் அரிதாரம்
அவசரமாய் பூசியவர்கள்;

பழம் தின்று கொட்டைபோட்ட
அரசியல் அண்ணாச்சிகளின்
மகள், மனைவி, மருமகள்,
அல்லது நண்பிகள்;

பெண் பினாமிகளை,
ஆண் பினாமிகளைவிட
ஆபத்தானவர்களாக,
குறித்து வைத்துள்ளது வரலாறு.

பினாமிகளுக்கா
முப்பத்து மூன்று?

சுயமாய் பெண்கள்
வரட்டும் அரசியலுக்கு;
சுத்தப்படுத்தலாம்
இருபாலரும் சேர்ந்தே,
சாக்கடையை!

Deepika Padukone















வேலைக்குச் செல்லும் பெண்ணே....!

வேலைக்குச் செல்லும் பெண்ணே....!

மேலே உரசும் எருமை மாடுகள்,
முதுகின் மேல் மூச்சு விடும்
விஷ சர்ப்பங்கள்,

பார்வையால் கொத்தும்
பிணம் தின்னிக் கழுகுகள்,
எட்டிப் பார்க்கும் ஓட்ட்கங்கள்,

வழியில் நிற்கும் கொழுத்த கழுதைகள்,
அதிகார வர்க்க கடுவன் பூனைகள்,
தெரியாமல் பட்டதாய்
தொட்டுப் பார்க்கும் குள்ளநரிகள்,

சந்தர்ப்பம் எனும் உறுமீனுக்காய்
ஒற்றைக் காலில் நிற்கும் கொக்குகள் -

எப்படி சமாளிக்கிறாய்,
தனியாக ஒரு மிருகக் காட்சி சாலையை?

பெண் நிதானமாகப் பதில் சொன்னாள்:
"எனக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது,
சிங்கம், அது பெண் சிங்கம்!"

METROPOLITAN TRANSPORT CORPORATION CHENNAI LTD


SLNo Type Route No. From To No.Of Services Journey Time In Minutes Fare In Rs.Ps
1 ORD 1 TONDIARPET TRIPLICANE 1 46 4
NIGHT 1 ENNORE THIRUVANMIYUR 1 90 13
NIGHT 1 THIRUVOTRIYUR THIRUVANMIYUR 1 70 12
LSS 1 THIRUVOTRIYUR THIRUVANMIYUR 17 80 6.5
EXP 1 THIRUVOTRIYUR THIRUVANMIYUR 2 70 9
2 ORD 4 TOLLGATE BESANT NAGAR 2 95 6
LSS 4 TOLLGATE BESANT NAGAR 8 80 6.5
3 ORD 5 PARRYS ADAYAR B.S. 5 55 4.5
4 ORD 9 T.NAGAR B.S. PARRYS 2 45 4.5
5 ORD 10 PARRYS T.NAGAR B.S. 3 55 4.5
6 ORD 11 PARRYS T.NAGAR B.S. 3 45 4
GS 11 PARRYS T.NAGAR B.S. 1 45 4
7 ORD 12 T.NAGAR B.S. VIVEKANANDA HOUSE 4 40 3.5
8 ORD 13 T.NAGAR B.S. TRIPLICANE 8 40 3.5
9 ORD 15 ANNANAGAR B.S. PARRYS 2 38 4
10 ORD 17 PARRYS VADAPALANI B.S. 5 60 4.5
11 ORD 18 PARRYS SAIDAPET 3 45 4
12 ORD 19 T.NAGAR B.S. KANNATHUR 3 70 6
13 ORD 20 VILLIVAKKAM PARRYS 12 45 4
14 ORD 21 MANDAVELI PARRYS 11 38 4
15 ORD 22 AYANAVARAM B.S. ANNA SQUARE 5 45 4
16 ORD 25 VADAPALANI B.S. TRIPLICANE 3 50 4.5
17 ORD 26 I.C.F. T.NAGAR B.S. 3 60 4.5
18 ORD 27 ANNANAGAR B.S. ANNA SQUARE 1 48 4.5
19 ORD 28 THIRUVOTRIYUR EGMORE R.S. 7 60 4.5
GS 28 THIRUVOTRIYUR EGMORE R.S. 1 60 4.5
20 ORD 29 PERIYAR NAGAR Q.M.ARTS COLLEGE 4 70 4.5
21 ORD 31 ROYAPURAM (R.M.C.) DR.AMBEDKAR BRIDGE 4 50 4
22 LSS 32 VALLALAR NAGAR VIVEKANANDA HOUSE 8 40 3.5
23 ORD 33 M.K.B.NAGAR HIGHCOURT 6 40 3
GS 33 M.K.B.NAGAR HIGHCOURT 1 40 3
24 ORD 34 AMBATTUR ESTATE THIRUVOTRIYUR 2 95 6
LSS 34 THIRUVOTRIYUR AMBATTUR ESTATE 8 75 6.5
EXP 34 THIRUVOTRIYUR AMBATTUR ESTATE 4 75 9
25 ORD 35 AYANAVARAM B.S. PARRYS 3 40 3
26 ORD 37 IYAPPANTHANGAL VALLALAR NAGAR 3 80 6
27 ORD 38 THIRU-VI-KA NAGAR THIRUVOTRIYUR 2 85 5
28 ORD 40 AMBATTUR O.T. ANNA SQUARE 3 72 5.5
29 ORD 42 PERIYAR NAGAR PARRYS 10 50 4.5
30 ORD 44 MANALI HIGHCOURT 4 60 6
31 ORD 46 THIRU-VI-KA NAGAR C.M.B.T. 6 65 4
NIGHT 46 THIRU-VI-KA NAGAR C.M.B.T. 1 50 9
32 ORD 47 ADAYAR B.S. VILLIVAKKAM 9 67 5
33 ORD 48 VILLIVAKKAM VALLALAR NAGAR 9 39 3.5
34 ORD 49 POONAMALLEE T.NAGAR B.S. 3 100 5.5
35 ORD 50 THIRUVERKKADU HIGHCOURT 5 60 5
36 ORD 51 SAIDAPET KOLATHUR 2 80 6
37 ORD 52 BROADWAY POZHICHALUR 6 70 6
38 ORD 53 POONAMALLEE BROADWAY 7 70 5.5
39 LSS 54 BROADWAY POONAMALLEE 11 75 6.5
EXP 54 BROADWAY POONAMALLEE 1 75 9
40 ORD 55 TAMBARAM B.S. VANDALOOR RLY.GATE 6 33 3.5
41 ORD 56 VALLALAR NAGAR ENNORE 2 60 4.5
42 ORD 57 REDHILLS VALLALAR NAGAR 11 45 4.5
43 ORD 59 VALLALAR NAGAR THIRUVERKKADU 12 73 5.5
EXP 59 VALLALAR NAGAR THIRUVERKKADU 2 70 8.5
44 ORD 60 ANAKAPUTHUR BROADWAY 8 70 6
45 ORD 62 POONAMALLEE REDHILLS 1 100 6
LSS 62 POONAMALLEE REDHILLS 4 75 6.5
EXP 62 POONAMALLEE REDHILLS 6 80 9
46 ORD 66 POONAMALLEE TAMBARAM B.S. 12 75 5.5
47 ORD 70 AMBATTUR O.T. TAMBARAM B.S. 3 85 6
NIGHT 70 AVADI TAMBARAM B.S. 5 70 13
LSS 70 TAMBARAM B.S. AVADI 16 85 7
EXP 70 AVADI TAMBARAM B.S. 2 75 10
EXP 70 AVADI TAMBARAM B.S. 12 80 10
48 ORD 71 AMBATTUR ESTATE HIGHCOURT 4 50 4.5
49 ORD 80 TAMBARAM B.S. PADAPPAI 2 50 4.5
50 NIGHT 101 THIRUVOTRIYUR POONAMALLEE 2 90 13
LSS 101 THIRUVOTRIYUR POONAMALLEE 5 100 7
DELUXE 101 THIRUVOTRIYUR POONAMALLEE 2 100 14
EXP 101 THIRUVOTRIYUR POONAMALLEE 5 100 10
51 LSS 103 AVADI VALLALAR NAGAR 4 65 6
52 ORD 114 TAMBARAM B.S. REDHILLS 2 100 6.5
NIGHT 114 REDHILLS TAMBARAM B.S. 2 70 13
LSS 114 REDHILLS TAMBARAM B.S. 7 80 7
EXP 114 REDHILLS TAMBARAM B.S. 8 75 10
53 ORD 116 KANNADASAN NAGAR HIGHCOURT 3 45 4
LSS 116 KANNADASAN NAGAR HIGHCOURT 6 45 4.5
54 NIGHT 120 PARRYS AVADI 1 65 12
LSS 120 PARRYS AVADI 8 70 6.5
EXP 120 AVADI PARRYS 5 70 9
55 ORD 121 AMBATTUR ESTATE MINJUR N.T. 1 100 6.5
ORD 121 MINJUR N.T. KOYAMBEDU MARKET 1 90 7
56 LSS 134 MOGAPPAIR EAST TOLLGATE 1 70 5.5
57 LSS 138 ENNORE KODUNGAIYUR-MUTHAMIZHNAGAR 1 75 6.5
58 ORD 142 KOLATHUR NEHRU ROAD JN. PARRYS 3 50 4
59 LSS 147 THIRUVANMIYUR AMBATTUR ESTATE 10 80 6.5
EXP 147 THIRUVANMIYUR AMBATTUR ESTATE 2 80 9
60 LSS 148 ORAGADAM VALLALAR NAGAR 1 65 5.5
61 LSS 150 AVADI BROADWAY 1 85 6.5
62 LSS 153 THIRUMAZHISAI BROADWAY 11 75 6.5
63 ORD 154 T.NAGAR B.S. PATTU MANGADU 1 60 5
64 ORD 159 THIRUVOTRIYUR THIRUVERKKADU 8 105 6
EXP 159 THIRUVOTRIYUR THIRUVERKKADU 1 100 9
65 ORD 164 M.M.C. BROADWAY 7 55 4.5
66 LSS 170 TAMBARAM B.S. THIRUVERKKADU 4 80 7
EXP 170 TAMBARAM B.S. THIRUVERKKADU 2 75 10
67 LSS 237 ENNORE VADAPALANI B.S. 2 110 7
68 PP 242 PARRYS REDHILLS 8 65 6
EXP 242 PARRYS REDHILLS 5 65 8.5
69 ORD 248 VALLALAR NAGAR PUDUR 2 70 5
LSS 248 VALLALAR NAGAR PUDUR 12 58 5.5
EXP 248 VALLALAR NAGAR PUDUR 2 58 7.5
70 LSS 254 BROADWAY PORUR 4 60 5.5
EXP 254 BROADWAY PORUR 2 60 7.5
71 ORD 101CT TOLLGATE C.M.B.T. 2 65 5
72 ORD 10A TOLLGATE SAIDAPET WEST 3 90 6
73 ORD 10C PARRYS K.K.NAGAR B.S. 1 70 5.5
74 LSS 114C ALAMATHI KOYAMBEDU MARKET 1 70 6.5
75 LSS 114CUT REDHILLS KOYAMBEDU MARKET 4 48 5.5
76 LSS 116A HIGHCOURT M.K.B.NAGAR EAST 3 35 4
77 LSS 116EXT KANNADASAN NAGAR HIGHCOURT 1 40 4.5
78 ORD 11A VALLALAR NAGAR T.NAGAR B.S. 10 55 4.5
79 ORD 11AEX M.K.B.NAGAR EAST T.NAGAR B.S. 2 70 5
80 ORD 11G PARRYS K.K.NAGAR B.S. 10 70 4.5
81 EXP 11GCU CENTRAL R.S. K.K.NAGAR B.S. 1 55 7
82 LSS 11H PARRYS IYAPPANTHANGAL 11 80 6.5
83 LSS 11HCUT PARRYS VALASARAVAKKAM 8 65 5.5
84 LSS 120CU BROADWAY THIRUMULLAIVOYAL COLONY 1 75 6.5
85 ORD 121A MANALI KOYAMBEDU MARKET 2 60 6
86 ORD 121C ENNORE C.M.B.T. 1 105 6
87 ORD 121D MANALI NEWTOWN C.M.B.T. 1 85 6
88 ORD 12B VADAPALANI B.S. FORESHORE ESTATE 15 55 4
89 LSS 12BEXT C.M.B.T. FORESHORE ESTATE 4 50 6.5
90 ORD 12C SALIGRAMAM MYLAPORE 9 70 4.5
91 ORD 12CEXT C.M.B.T. MYLAPORE 2 65 4.5
92 ORD 12G K.K.NAGAR B.S. ANNA SQUARE 13 65 5
EXP 12G K.K.NAGAR B.S. ANNA SQUARE 1 60 7.5
93 LSS 12GEX ANNA SQUARE RAMAPURAM 1 75 5.5
94 ORD 12H IYAPPANTHANGAL FORESHORE ESTATE 3 80 5
95 ORD 12K FORESHORE ESTATE KOYAMBEDU MARKET 1 65 5
96 LSS 134A V.O.C.NAGAR MOGAPPAIR EAST 1 70 5.5
97 PP 138A THIRUVOTRIYUR PERIYAR NAGAR 4 70 5.5
98 ORD 13B T.NAGAR B.S. ANNA SQUARE 4 45 3.5
99 ORD 142B PERAVALLUR KUMARAN NAGAR PARRYS 2 50 4
100 LSS 142E VINAYAGAPURAM PARRYS 2 50 5
101 ORD 147CT AMBATTUR ESTATE THIRUVANMIYUR 1 90 6
102 LSS 147CUT ELANGONAGAR OFFICERS COL. THIRUVANMIYUR 2 75 6.5
103 ORD 14A VALLALAR NAGAR C.M.B.T. 1 55 4.5
104 ORD 154CUT T.NAGAR B.S. MANGADU 1 65 4.5
105 ORD 159A THIRUVOTRIYUR C.M.B.T. 6 75 6
NIGHT 159A THIRUVOTRIYUR C.M.B.T. 1 65 12
106 ORD 159AEX ENNORE C.M.B.T. 1 105 6.5
NIGHT 159AEX ENNORE C.M.B.T. 1 90 13
107 ORD 159CT THIRUVOTRIYUR KOYAMBEDU MARKET 2 75 6
108 ORD 15B PARRYS C.M.B.T. 18 45 4
109 ORD 15BX MADURAVOYAL PARRYS 1 50 4.5
110 ORD 15C LOYOLA COLLEGE PARRYS 1 40 4
111 ORD 15D ANNANAGAR WEST PARRYS 2 48 4
112 ORD 15F KOYAMBEDU MARKET PARRYS 11 45 4.5
NIGHT 15F KOYAMBEDU MARKET PARRYS 4 40 9
113 NIGHT 15FCUT PARRYS KOYAMBEDU MARKET 1 45 9
ORD 15FCUT PARRYS KOYAMBEDU MARKET 4 45 4.5
114 ORD 15G PARRYS M.M.D.A.COLONY 10 38 4
115 ORD 15GEX KOYAMBEDU MARKET PARRYS 1 45 4.5
116 LSS 15L AMBATTUR O.T. PARRYS 4 60 5.5
117 LSS 15LCU ATHIPET I.C.F. COLONY PARRYS 1 60 5
118 LSS 15LEXT PARRYS GNANAMOORTHY NAGAR 2 65 5.5
119 LSS 15M I.O.C. VADAPALANI B.S. 1 80 6.5
120 ORD 16A KORATTUR Q.M.ARTS COLLEGE 2 55 4.5
121 ORD 170A MADHAVARAM VILLAGE TAMBARAM B.S. 1 80 6.5
LSS 170A MADHAVARAM VILLAGE TAMBARAM B.S. 2 80 7
EXP 170A MADHAVARAM VILLAGE TAMBARAM B.S. 4 80 10
122 EXP 170B THIRU-VI-KA NAGAR TAMBARAM B.S. 1 75 10
123 EXP 170BCU PERAVALLUR KUMARAN NAGAR TAMBARAM B.S. 1 70 9
124 ORD 170C THIRU-VI-KA NAGAR GUINDY T.V.K. ESTATE 3 70 5.5
LSS 170C MANALI GUINDY T.V.K. ESTATE 2 90 6.5
EXP 170C THIRU-VI-KA NAGAR GUINDY T.V.K. ESTATE 1 70 8.5
125 ORD 170CT PERAVALLUR KUMARAN NAGAR GUINDY T.V.K. ESTATE 2 65 5
126 EXP 170DEX KANNADASAN NAGAR GUINDY T.V.K. ESTATE 1 75 9
127 ORD 170E I.O.C. C.M.B.T. 1 65 5.5
128 ORD 17A PARRYS KOYAMBEDU MARKET 3 65 5
NIGHT 17A PARRYS KOYAMBEDU MARKET 1 65 10
129 ORD 17ACUT PARRYS C.M.B.T. 2 65 5.5
130 ORD 17B PARRYS MANGADU 3 90 6
131 ORD 17BCT KOYAMBEDU MARKET MANGADU 1 60 4.5
132 ORD 17C PARRYS IYAPPANTHANGAL 4 80 6
133 ORD 17D PARRYS K.K.NAGAR B.S. 17 68 5.5
NIGHT 17D PARRYS (15F) C.M.B.T. 1 40 9
134 ORD 17DEXT PARRYS SAIDAPET WEST 2 75 5.5
135 ORD 17E PARRYS SALIGRAMAM 8 60 5
136 ORD 17EXT PARRYS C.M.B.T. 2 90 6
137 ORD 17G PARRYS MOGALIVAKKAM 2 85 6
138 ORD 17GCT MOGALIVAKKAM KOYAMBEDU MARKET 1 55 4.5
139 ORD 17K PARRYS DASARATHAPURAM 2 60 5
140 ORD 17L SALIGRAMAM PARRYS 2 60 4.5
141 ORD 17M IYAPPANTHANGAL PARRYS 4 80 5.5
LSS 17M PARRYS IYAPPANTHANGAL 9 75 6
EXP 17M PARRYS IYAPPANTHANGAL 1 75 8.5
142 ORD 17MCUT PARRYS VADAPALANI B.S. 5 50 4.5
143 ORD 17N PARRYS C.M.B.T. 3 60 5.5
144 ORD 18A BROADWAY TAMBARAM B.S. 6 80 6
NIGHT 18A BROADWAY TAMBARAM B.S. 4 65 12
145 EXP 18ACU HIGHCOURT AIRPORT (MEENAMBAKKAM) 2 60 7.5
146 ORD 18B PARRYS KOTTURPURAM 4 55 4.5
147 ORD 18BCUT KOYAMBEDU MARKET KOTTURPURAM 1 55 4.5
148 ORD 18CCUT PARRYS ST.THOMAS MOUNT R.S. 2 70 5
149 ORD 18CEXT SAIDAPET KILKATTALAI 3 40 4
150 ORD 18CUT PARRYS GUINDY T.V.K. ESTATE 1 45 4
151 LSS 18D BROADWAY KILKATTALAI 2 80 6
EXP 18D BROADWAY KILKATTALAI 1 70 8.5
152 LSS 18DCUT SAIDAPET PALLAVARAM 1 60 5
LSS 18DCUT BROADWAY MOOVARASAMPET 3 75 6
153 LSS 18DE BROADWAY PALLAVARAM GATE 1 85 6.5
154 ORD 18DEX BROADWAY PALLAVARAM 1 105 6
155 ORD 18E PARRYS RAMAPURAM 3 70 5
156 ORD 18ECT RAMAPURAM T.NAGAR B.S. 1 40 3
157 ORD 18G PARRYS K.K.NAGAR B.S. 2 75 5
158 LSS 18GEXT C.M.B.T. PARRYS 3 70 6
159 ORD 18H TAMBARAM B.S. NADUVEERAPATTU 1 42 3.5
160 ORD 18K PARRYS SAIDAPET WEST 15 55 4
161 ORD 18M VADAPALANI B.S. TAMBARAM B.S. 6 72 5
EXP 18M VADAPALANI B.S. TAMBARAM B.S. 1 65 7.5
162 LSS 18MEXT SALIGRAMAM TAMBARAM B.S. 1 70 6.5
163 ORD 18N VADAPALANI B.S. VANDALOOR ZOO 2 75 6
164 ORD 18P PARRYS VELACHERY HOSPITAL 2 60 4.5
165 LSS 18S PARRYS INDIRA NAGAR W.T. 1 50 5
166 ORD 18T PARRYS DHARMARAJA KOIL 1 55 4.5
167 ORD 19B SAIDAPET KELAMBAKKAM 8 90 6
LSS 19B SAIDAPET KELAMBAKKAM 4 70 6.5
168 ORD 19BCU SAIDAPET THORAPAKKAM PTC COLONY 2 50 4.5
169 ORD 19BCUT ADAYAR B.S. SHOLINGANALLUR 3 45 4.5
ORD 19BCUT T.NAGAR B.S. THORAPAKKAM PTC COLONY 7 60 4.5
170 ORD 19CT ADAYAR B.S. INJAMBAKKAM 3 42 4.5
171 LSS 19E HIGHCOURT KOVALAM 1 100 7.5
172 ORD 19EXT K.K.NAGAR B.S. KOVALAM 3 105 7
173 LSS 19G BROADWAY KOVALAM 6 95 7.5
EXP 19G BROADWAY KOVALAM 4 95 10.5
174 ORD 19GCUT BROADWAY SRINIVASAPURAM 2 65 5
ORD 19GCUT SAIDAPET KOVALAM 2 70 6
175 ORD 19K SAIDAPET SHOLINGANALLUR 1 60 5
176 ORD 19KCU ADAYAR B.S. THORAPAKKAM PTC COLONY 1 33 3.5
177 LSS 19KCUT ADAYAR B.S. SIRUCHERY 2 60 6
178 NIGHT 19S PARRYS THIRUVANMIYUR 1 55 10
179 NIGHT 1B THIRUVOTRIYUR TAMBARAM B.S. 3 100 13
LSS 1B THIRUVOTRIYUR TAMBARAM B.S. 4 100 7
EXP 1B THIRUVOTRIYUR TAMBARAM B.S. 6 100 10
180 LSS 1C ENNORE THIRUVANMIYUR 4 100 7
EXP 1C ENNORE THIRUVANMIYUR 3 100 10
181 ORD 1CUT KASIMEDU P.S. TRIPLICANE 1 40 4
LSS 1CUT THIRUVOTRIYUR HIGHCOURT 2 40 4.5
DELUXE 1CUT THIRUVANMIYUR CENTRAL R.S. 2 55 10
EXP 1CUT THIRUVANMIYUR THIRUVOTRIYUR 1 80 9
182 ORD 1D ENNORE THIRUVANMIYUR 2 120 7
LSS 1D ENNORE THIRUVANMIYUR 2 105 7.5
183 LSS 1E ENNORE TRIPLICANE 5 72 6
EXP 1E ENNORE TRIPLICANE 1 72 8.5
184 ORD 1EXT THIRUVOTRIYUR THIRUVANMIYUR 4 80 6
185 LSS 1F I.O.C. THIRUVANMIYUR 1 70 6.5
186 EXP 1G THIRUVOTRIYUR VELACHERY 3 80 9
187 LSS 1GCUT PARRYS MADIPAKKAM B.S. 3 75 5.5
188 ORD 20A MOGAPPAIR EAST HIGHCOURT 1 60 4.5
189 ORD 20B MENAMBEDU PARRYS 3 80 5.5
190 ORD 20C ORAGADAM HIGHCOURT 3 70 5.5
191 ORD 20ECT AYANAVARAM B.S. AYAPPAKKAM 1 55 4.5
192 ORD 20H KARUKKU PERIYAR BRIDGE 1 80 5.5
193 ORD 20K AMBATTUR ESTATE KOYAMBEDU MARKET 1 65 3.5
194 ORD 20M PERAVALLUR KUMARAN NAGAR PARRYS 2 65 5
195 ORD 21B PARRYS ADAYAR B.S. 3 35 4
196 ORD 21CEX KANNADASAN NAGAR MYLAPORE 3 70 5
197 ORD 21D PARRYS INDIRA NAGAR W.T. 6 45 4.5
198 ORD 21E PARRYS NANDAMBAKKAM 2 65 5
199 ORD 21EEX PARRYS PORUR 2 70 5.5
200 LSS 21G HIGHCOURT TAMBARAM B.S. 7 72 6.5
DELUXE 21G HIGHCOURT TAMBARAM B.S. 5 60 13
EXP 21G HIGHCOURT TAMBARAM B.S. 9 72 9
201 ORD 21GCT HIGHCOURT PALLAVARAM 5 75 6
202 LSS 21H HIGHCOURT KELAMBAKKAM 8 95 7
EXP 21H HIGHCOURT KELAMBAKKAM 8 85 10
203 ORD 21HCT ADAYAR B.S. KELAMBAKKAM 6 70 6
204 ORD 21K PARRYS BHARAT ELECTRONICS 3 65 5
205 LSS 21L PARRYS VELACHERY 9 50 5.5
EXP 21L PARRYS VELACHERY 2 50 7.5
206 LSS 21LEX PARRYS KILKATTALAI 2 70 6.5
207 ORD 21M PARRYS KOVOOR 1 80 6
208 ORD 21N PARRYS MANDAVELI 1 30 3.5
209 ORD 21NEX PARRYS GUINDY T.V.K. ESTATE 2 60 4.5
210 ORD 22A AMBATTUR ESTATE THIRUVANMIYUR 2 95 6
LSS 22A AMBATTUR ESTATE THIRUVANMIYUR 7 80 6.5
EXP 22A AMBATTUR ESTATE THIRUVANMIYUR 1 80 9
211 LSS 22C AMBATTUR O.T. ANNA SQUARE 2 70 6
212 ORD 23A PALAVAKKAM EGMORE R.S. 3 80 5
213 ORD 23C AYANAVARAM B.S. BESANT NAGAR 12 80 5.5
EXP 23C BESANT NAGAR VILLIVAKKAM 2 75 9
214 ORD 23CCUT ADAYAR B.S. EGMORE R.S. 1 45 4
215 ORD 23G BESANT NAGAR EGMORE R.S. 1 60 4.5
216 ORD 23H KORATTUR THIRUVANMIYUR 1 100 6
217 ORD 23K BESANT NAGAR EGMORE R.S. 1 80 4.5
218 ORD 23M BESANT NAGAR C.M.B.T. 4 65 5
219 LSS 242CU PUZHAL P.U.O. PARRYS 1 52 5.5
220 LSS 24A ANNANAGAR WEST VIVEKANANDA HOUSE 7 50 5
221 LSS 24C AVADI VIVEKANANDA HOUSE 8 80 6.5
222 ORD 24CCT ELANGONAGAR OFFICERS COL. VIVEKANANDA HOUSE 2 50 4.5
223 LSS 24CCU AVADI GEMINI 2 65 6
224 ORD 24D VIVEKANANDA HOUSE KOYAMBEDU MARKET 1 60 4.5
225 ORD 25B K.K.NAGAR B.S. TRIPLICANE 3 50 4.5
226 ORD 25E K.K.NAGAR B.S. ANNA SQUARE 3 50 4.5
227 ORD 25G POONAMALLEE ANNA SQUARE 3 100 6
LSS 25G POONAMALLEE ANNA SQUARE 15 100 6.5
228 LSS 25GCT ANNA SQUARE IYAPPANTHANGAL 5 60 5.5
229 LSS 25GCUT POONAMALLEE C.M.B.T. 2 55 5
230 ORD 25M MYLAPORE AGARAM MEL 1 80 6
231 ORD 27B C.M.B.T. ANNA SQUARE 14 55 4.5
NIGHT 27B C.M.B.T. TRIPLICANE 1 45 9
232 ORD 27BC M.M.D.A.COLONY ANNA SQUARE 1 48 4.5
233 ORD 27C T.NAGAR B.S. THIRUVERKKADU 9 75 5
NIGHT 27C T.NAGAR B.S. KOYAMBEDU MARKET 1 75 8
234 ORD 27D VILLIVAKKAM FORESHORE ESTATE 16 70 5
235 LSS 27H AVADI TRIPLICANE 11 80 6.5
236 ORD 27HCT ANNANAGAR WEST TRIPLICANE 1 55 4.5
237 LSS 27HE PATTABIRAM TRIPLICANE 1 85 6.5
238 ORD 27K VILLIVAKKAM FORESHORE ESTATE 2 70 5
239 ORD 27L MOGAPPAIR WEST ANNA SQUARE 2 60 5
LSS 27L ANNANAGAR WEST ANNA SQUARE 6 60 5
240 LSS 27M MOGAPPAIR WEST FORESHORE ESTATE 1 65 5.5
241 LSS 27N MOGAPPAIR EAST ANNA SQUARE 2 55 5.5
242 ORD 28A MANALI NEWTOWN EGMORE R.S. 3 90 6
243 ORD 28ACUT VALLALAR NAGAR MANALI NEWTOWN 3 70 5
ORD 28ACUT VALLALAR NAGAR MANALI NEWTOWN 1 70 5
244 ORD 28B ENNORE EGMORE R.S. 9 85 5.5
LSS 28B ENNORE PERIYAR BRIDGE 1 70 5.5
245 ORD 28CCUT TOLLGATE Q.M.ARTS COLLEGE 2 60 4
246 LSS 28D TOLLGATE GUINDY T.V.K. ESTATE 3 85 6.5
247 ORD 28M T.NAGAR B.S. PORUR 1 48 4
248 ORD 29A PERAMBUR ANNA SQUARE 17 50 4.5
249 ORD 29AEX PERAVALLUR KUMARAN NAGAR ANNA SQUARE 1 65 4.5
250 ORD 29B PERAMBUR SAIDAPET 8 75 5
251 ORD 29C PERAMBUR BESANT NAGAR 24 70 5.5
GS 29C PERAMBUR BESANT NAGAR 1 70 5.5
EXP 29C PERAMBUR BESANT NAGAR 2 70 8.5
252 ORD 29CCT I.C.F. BESANT NAGAR 3 70 5.5
253 ORD 29CXT M.M.C. THIRUVANMIYUR 2 100 6
254 ORD 29D M.M.C. VIVEKANANDA HOUSE 4 80 5
255 ORD 29E PERAMBUR THIRUVERKKADU 8 65 6
256 LSS 29EX VINAYAGAPURAM Q.M.ARTS COLLEGE 1 55 5.5
257 LSS 29G AYANAVARAM B.S. PORUR 1 65 6
258 ORD 29KCUT C.M.B.T. MANDAVELI 2 50 4.5
259 ORD 29L PERIYAR NAGAR THIRUVANMIYUR 6 100 6
260 ORD 29M PERAMBUR THIRUVANMIYUR 6 70 5.5
261 LSS 29N PERAMBUR VELACHERY 7 75 6.5
262 LSS 29NEXT PERAVALLUR KUMARAN NAGAR VELACHERY 1 95 6.5
263 ORD 29S PERIYAR NAGAR FORESHORE ESTATE 1 70 5
264 ORD 2A M.K.B.NAGAR ANNA SQUARE 7 50 4
GS 2A M.K.B.NAGAR ANNA SQUARE 1 50 4
265 LSS 2AEXT KANNADASAN NAGAR ANNA SQUARE 3 50 5
266 LSS 32A TOLLGATE DR.AMBEDKAR BRIDGE 14 65 5
267 ORD 32B KORUKKUPET R.S. VIVEKANANDA HOUSE 7 45 3.5
268 ORD 33EXT M.K.B.NAGAR EAST HIGHCOURT 1 42 3
LSS 33EXT MUTHAMIZH NAGAR DR.AMBEDKAR BRIDGE 1 65 5
269 LSS 34CU THIRUVOTRIYUR ELANGONAGAR OFFICERS COL. 1 72 6
270 ORD 37B THIRU-VI-KA NAGAR VADAPALANI B.S. 6 70 5.5
271 ORD 37C VILLIVAKKAM VADAPALANI B.S. 2 65 4.5
272 ORD 37CUT DASARATHAPURAM VALLALAR NAGAR 1 65 5
273 LSS 37D VALLALAR NAGAR K.K.NAGAR B.S. 14 75 6.5
274 ORD 37E KANNADASAN NAGAR VADAPALANI B.S. 3 75 6
275 ORD 37ECT M.K.B.NAGAR VADAPALANI B.S. 2 60 5
276 ORD 37G VALLALAR NAGAR IYAPPANTHANGAL 2 110 6
LSS 37G VALLALAR NAGAR IYAPPANTHANGAL 20 85 6.5
277 ORD 38C THIRU-VI-KA NAGAR VIVEKANANDA HOUSE 9 60 4
278 ORD 38D THIRUVOTRIYUR KODUNGAIYUR-PARVATHYNAGAR 1 70 5
279 ORD 38F MADHAVARAM VILLAGE MYLAPORE 1 65 6
LSS 38F MADHAVARAM VILLAGE MYLAPORE 7 70 6.5
280 ORD 38G VAZHUTHIGAIMEDU HIGHCOURT 2 95 6.5
281 ORD 38H MADHAVARAM VILLAGE HIGHCOURT 2 50 4.5
282 LSS 38L KODUNGAIYUR-PARVATHYNAGAR HIGHCOURT 1 45 5
283 ORD 3A MYLAPORE PARRYS 1 40 4
284 ORD 40A AVADI ANNA SQUARE 2 100 6
LSS 40A AVADI ANNA SQUARE 10 80 6.5
285 LSS 40ACU AVADI EGMORE R.S. 2 70 6
286 ORD 40EXT MENAMBEDU ANNA SQUARE 1 78 6
287 ORD 41C MOGAPPAIR WEST THIRUVANMIYUR 2 90 6
LSS 41C ANNANAGAR WEST THIRUVANMIYUR 7 65 6.5
288 ORD 41D AMBATTUR O.T. MANDAVELI 3 100 6
LSS 41D AMBATTUR O.T. MANDAVELI 11 80 6.5