Best Poem - Nominated by UN

on Monday, March 30, 2009


When I born, I black
When I grow up, I black
When I go in Sun, I black
When I scared, I black
When I sick, I black
And when I die, I still black
And you white fellowWhen you born, you pink
When you grow up, you white
When you go in sun, you red
When you cold, you blue
When you scared, you yellow
When you sick, you green
And when you die, you gray
And you calling me colored?

ஹெல்த் எப்படி இருக்கு ?

எஸ்.ராமகிருஷ்ணன் மீது எனக்குப் பொறாமையாக உள்ளது. எப்படி இந்த மனிதரிடம் பேசும் எல்லா மனிதர்களும் அற்புதமாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று. இவர் காசிக்குச் சென்றாலும் சரி, கரந்தட்டாங்குடி சென்றாலும் சரி, இவரிடம் பேசும் மனிதர்கள் அற்புதம் அற்புதமாகவே பேசுகிறார்கள். ஆனால் என் கதை ?

அது எப்படித்தான் தேர்ந்தெடுத்து என்னிடம் வந்து சேர்கிறார்களோ தெரியவில்லை. நேற்று என் தோழி ஆனந்தி கேட்டாள். “ விஜய் டிவியில் உங்களைப் பார்த்தேன். அவந்திகா ரொம்ப அழகு. நீங்கள் ஒன்றும் தியாகம் செய்து விடவில்லை ” இந்த் ஆனந்தி எனக்கு 30 போன் செய்தால் ஒரே ஒரு முறை அவள் போனை எடுப்பேன்.

“ நீ என்ன பொம்பளை ஜெயமோகனா ? ” என்று குலைத்து விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டேன்.

இன்று காலை மீண்டும் பேசியவள் தன்னை இதுவரை யாருமே இவ்வளவு மோசமாக திட்டியதில்லை என்று கூறி மேலும் சிலது சொன்னாள். எனக்கே ஜெயன் மீது பாவமாகப் போய்விட்டது. பொதுவாக நான் பேசுவதே இல்லை. அவந்திகாவிடம் கூட ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசுவேன். (கொலப் பசி பசிக்குது; சீக்கிரம் கவனிம்மா)

எனக்கு தொலைபேசி அழைப்புகளும் அவ்வளவாக வருவதில்லை. சில நாட்களில் ஒன்றிரண்டு அழைப்புகள் கூட வராது. திடீரென்று யோசித்துப் பார்ப்பேன். ‘ காலையிலிருந்து நாம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அல்லவா ? ‘ என்று. இப்படியே பல தினங்கள் செல்லும், ஒரு வார்த்தை பேசாமல்.

இது எனக்குப் பிடித்திருக்கிறது. அதுவும் குறுஞ்செய்தி வசதி வந்தபிறகு எப்போதாவது பேசும் மனிதர்கள் கூட குறுஞ்செய்தியே அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

இந்தியர்கள் அதிகம் பேசுகிறார்கள். அதிலும் மலையாளிகளை இந்த விஷயத்தில் யாருமே அடித்துக் கொள்ள முடியாது. ஒருமுறை பாலக்காட்டிலிருந்து என் நண்பர் ஒருவர் ஆஸ்துமா காரணமாக மூச்சு விட முடியாமல் போய் அவசரமாக ‘ஐக்யூ ’ வில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அத்தகவலை எனக்குத் தெரிவிக்க போன் செய்து 10 நிமிடம் பேசினார். ஏகேஎம் அதிகம் பேசுவதற்குக் கூட இதுதான் காரணம் என்று தோன்றுகிறது. ஏகேஎம் பற்றிப் பிறகு சொல்கிறேன்.

நான் ஆட்டோவில் செல்பவனாதலால் இந்த ஆட்டோ டிரைவர்களின் பேச்சினால் வேறு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். என் முகத்தைப் பார்த்தாலே பேச வேண்டும் என்று தோன்றும் போலிருக்கிறது. நேற்று ஒரு ஆட்டோக்காரர் ‘ அறுபத்து மூவர் விழா ‘ வில் அவருடைய ஸ்டாண்டில் என்னென்ன அய்ட்டங்கள் சமைத்து மக்களுக்கு வழங்கினார்கள் என்றும், அடுத்த ஸ்டாண்டில் என்னென்ன அய்ட்டங்கள் சமைத்து வழங்கினார்கள் என்றும் நான் செல்லுமிடம் சேரும் வரை விலாவரியாக விளக்கிக் கொண்டு போனார். (மயிலையில் அறுபத்து மூவர் விழா அன்று யாரும் வீட்டில் சமைக்க மாட்டார்கள். மயிலை முழுவதும் மூலைக்கு மூலை அன்னதானம் நடந்து கொண்டிருக்கும்).

இவருடைய ஸ்டாண்டில் சாம்பார் சாதம், தயிர் சாதம், புளியோதரை எல்லாம் போட்டிருக்கிறார்கள். மாலையில் சர்பத். கூட பிஸ்கட். ஒரு ஐயரை வைத்தே சமைத்திருக்கிறார்கள். அந்த ஐயரின் பெயர் கூட சொன்னார். எனக்கு மறந்து தொலைந்து விட்டது.

ஆனால் என்ன இருந்தாலும் அடுத்த ஸ்டாண்டில் போட்ட அய்ட்டங்கள்தான் வெகு அருமையாக இருந்ததாம். அவர்கள் பிரிஞ்ஜி, வாங்கிபாத், பிஸிபேளாபாத் போன்ற அரிதான அய்ட்டங்களைத் தயாரித்திருக்கிறார்கள். மேற்கண்ட சப்ஜெக்ட் பற்றி அரை மணி நேரம் பேசி விட்டு பின்னர், இந்த ஆண்டு அறுபத்து மூவர் விழா பங்குனியின் ஆரம்பத்திலேயே வந்து விட்டதென்றும், அறுபத்து மூவர் விழா மட்டுமல்ல, ஈஸ்டர், தீபாவளி போன்ற பண்டிகைகள் கூட முன்கூட்டியே வந்து விட்டதென்றும் ஆச்சரியத்துடன் சொன்னார். அதை விட ஆச்சரியத்துடன் இந்த ஆண்டு ஃபெப்ருவரியில் 29 ஆம் தேதியும் வந்தது என்றார். ” எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்குல்ல சார் ? “ என்று அவர் காலம் ( Time ) பற்றி உரையாற்ற ஆரம்பித்த போது என் இடம் வந்து விட்டது.

என் மாமனாரின் சுப ஸ்வீகாரத்துக்காக முந்தா நாள் சின்மயா நகர் சென்ற போது - ஒரு மணி நேர ஆட்டோ பயணம் – வேறொரு ஆட்டோக்காரர் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்.

ஏதேதோ சொல்கிறார்; ஏதேதோ பேசுகிறார். வாயை மூடவே இல்லை. பேச்சு. பேச்சு. பேச்சு. ட்ராபிக் பற்றி பேச்சு. சென்னை நகர வெய்யில் பற்றி பேச்சு. அரசியல்வாதிகளின் ஊழல் பற்றி பேச்சு. ( இந்த சப்ஜெக்ட் பற்றி பேசாத ஆட்டோகாரரே கிடையாது என்று சொல்லலாம் ).

எனக்கு மண்டையில் ஆயிரம் வண்டுகள் பறப்பது போல் இருந்தது. ஒரு கட்டத்தில் ‘ ம் ‘ போடுவதே ஏதோ 100 கிலோ எடையை ‘ தம் ‘ கட்டி தூக்குவது போல் இருந்தது.

ஒரு கட்டத்தில் ‘ ம் ‘ கொட்டுவதை நிறுத்தி விட்டு கைத்தொலைபேசியில் பழைய குறுஞ்செய்திகளில் தேவையில்லாததை ‘ டெலீட் ‘ செய்ய ஆரம்பித்து விட்டேன். ஆனாலும் ஆட்டோக்காரர் விடாமல் பேசிக் கொண்டுதான் இருந்தார் – நான் சின்மயா நகர் சென்று சேரும் வரை.

ஒரு நாள் ஈரோட்டிலிருந்து ஒரு அன்பர் என்னைப் போனில் அழைத்தார். அழைத்தவரை எனக்கு முன்பின் தெரியாது. என் எழுத்தைப் படித்துவிட்டு என்னுடன் பேச வேண்டும் போல் தோன்றியிருக்கிறது. எப்படியோ என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து விட்டார். சரி. என்ன பேசினார் தெரியுமா ?

“உங்கள் இயற்பெயர் என்ன சார் ? “

“இயற்பெயரா ? என்னை எல்லோரும் சாரு என்றுதான் அழைக்கிறார்கள். அது தான் என் இயற்பெயர் “ என்றேன்.

” அது எப்படி சார் ? உங்கள் அப்பா அம்மா வைத்த பெயர் அதுவா ? ”

” அம்மா வைத்த பெயர் வேறு; அப்பா வைத்த பெயர் வேறு .... “

(அப்பா வைத்த பெயரை நிச்சயமாக வெளியே சொல்ல முடியாது; உதயசூரியன்)

” ஓ.... ஆனாலும் இயற்பெயர் என்று ஒன்று இருக்க வேண்டுமே சார்? ”

“இல்லை. பெயரை மாற்றிக் கொண்டு விட்டேன். எனக்கு வரும் செக் கூட சாரு நிவேதிதா என்ற பெயரில் தான் வருகிறது..... ”

“சரி சார்..... இதற்கு முன்னால் ஒரு பெயர் இருந்திருக்க வேண்டுமே....அது தான் இயற்பெயர்... அந்த இயற் பெயர் என்ன ? ”

“இதோ பாருங்கள் மிஸ்டர்.... அந்த இயற்பெயர் உங்களுக்கு எதற்கு ? “

“இல்லை சார்.... தெரிந்து கொள்ள வேண்டும் ஒரு ஆர்வம். ”

“அதைத் தெரிந்து கொண்டு உங்களுக்கு என்ன ஆகப் போகிறது ? ”

“உங்கள் எழுத்து மீதுள்ள ஆர்வம்தான் சார் காரணம்.... ”

“அப்படியானால் சாரு நிவேதிதாதான். அது தான் என் இயற்பெயர் “

“சார்.... என்ன சார் இது? உங்கள் அம்மா அப்பா அப்படித்தான் உங்களை அழைப்பார்களா ? ”

“என் அம்மா, அப்பாவை நான் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் பார்ப்பது வழக்கம். அதிலும் என் அம்மா இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அப்பா கூப்பிடும் பெயர் உங்களுக்கு எதற்கு ? ”

-இப்படியே இயற்பெயர் என்ற அந்த சனியன் பிடித்த விஷயத்தை பற்றியே 10 நிமிடம் நடந்தது உரையாடல். கடைசிவரை அவர் கேட்டதை நான் சொல்லவில்லை.

5 நிமிடம் கழித்து மீண்டும் அவரே போன் செய்தார்.

“சார், கண்டு பிடித்து விட்டேன். உங்கள் இணய தளத்தில் அறிவழகன் என்று போட்டிருக்கிறதே, அது தானே உங்கள் இயற்பெயர் ? ”

இதற்கு அடுத்து ஐந்து நிமிடம் போல் என் அப்பாவையும், இயற்பெயர் என்ற விஷயத்தையும், அறிவு அழகு போன்ற விஷயங்களையும் திட்டு திட்டு என்று திட்டித் தீர்த்தேன்.

பிறகு, அந்த நம்பரை ‘ ஸேவ் ’ செய்து அதில் ‘ டார்ச்சர் ‘ என்று குறித்து வைத்திருக்கிறேன்.

வேறொரு வகையான டார்ச்சர் இருக்கிறது. ஒரு நாள் ஒரு அன்பர் தொலைபேசியில் அழைத்து “ ஹெல்த் எப்படி இருக்கு ? ” என்றார்.

“என் ஹெல்த்துக்கு என்ன பிரச்சினை? ” என்று சூடாக கேட்டேன்.

‘ போன் செய்து இப்படி என்னுடைய ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறார்களே ‘ என்ற கோபம் ஏறியது.

“இல்லை சார். சர்ஜரி செய்திருக்கிறீர்களே, அதனால் கேட்டேன் ”

“சர்ஜரி செய்து இரண்டு வருடம் ஆகிறது. இப்போது என்ன அதற்கு ? ”

“இல்லை சார்....உஷாராக இருக்க வேண்டுமே, அதனால் கேட்டேன் “

அவருடைய நண்பர் ஒருவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம்; அதற்குப் பிறகு எப்போதுமே ரொம்ப கவனமாகத்தான் இருக்கிறாராம். அவர் கூறிய விஷயம் கவனம் அல்ல; மரண பயம்.

நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் பேர் இருதய அறுவை சிகிச்சை செய்தவுடன் ஆளே மாறிப் போய் விடுகிறார்கள். எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குகிறார்கள். பால குமாரனின் கேள்வி பதிலைப் பாருங்கள். மனிதர் 100 வயதைத் தாண்டிய – ஏதோ ஒரு படு பயங்கரமான நோயினால் தாக்குண்டவரைப் போல் தன் தினசரி வாழ்வு பற்றி பதில் சொல்கிறார்.

நான் அந்த அன்பரிடம் சொன்னேன். எனக்கு இதயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உடம்பில் கொழுப்பு கூடி ரத்தக் குழாயை அடைத்து விட்டதால் வேறு ஒரு ‘ வழி ‘ செய்திருக்கிறார்கள். இனிமேல் நான் கொழுப்பு கூடிய பொருட்களை சாப்பிடக் கூடாது. அவ்வளவுதான்.

இதை எவ்வளவு விளக்கியும் அவருக்குப் புரியவில்லை. ஏதோ ஒரு எய்ட்ஸ் நோயாளியிடம் பேசுவது போலவே பேசிக்கொண்டிருந்தார். நான் இம்மாதிரி சமயங்களில் பொதுவாக இணைப்பைத் துண்டித்து விடுவேன். ஆனால் அன்றைய தினம், இது எவ்வளவு தூரம் தான் போகிறது, பார்த்து விடுவோம் என்ற நிலையில் இருந்தேன். அரை மணி தூரம் சென்றது அந்த உரையாடல்.

பேசி முடித்ததும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். ‘மற்றவர் மீது அக்கறை காட்டுகிறோம் ’ என்ற நினைப்பிலேயே மற்றவர்களை எப்படி சித்ரவதைக்கு ஆளாக்குகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு நாள் ஒரு திருமண விருந்தின் போது சிக்கனும் சப்பாத்தியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த என் மைத்துனர் ஏதோ தீயை மிதித்து விட்டவரைப் போல் பதறிப் போய் “ நான் வெஜ்ஜெல்லாம் சாப்பிடலாமா? ” என்று அலறினார்.

பிறகு அவரும் மேற்கண்ட ஹெல்த் லெக்சரை அரைமணி நேரம் கொடுத்தார்.

நான் சொன்னேன், “ தயிர், ஆவக்காய் ஊறுகாய், வடாம், அப்பளம், மூன்று வேளையும் சோறு, நெய் போன்ற விஷயங்கள் தான் ஆபத்தானவை. சிக்கன் அல்ல ”

உடல் நலம் பற்றி மக்கள் பலவிதமான தவறான நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு இப்படி என்னைப் போன்ற ஆத்மாக்களை வதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நடிகர் குடிக்க மாட்டார்; சிகரெட் புகைக்க மாட்டார். காப்பி, டீ கூட கிடையாது. அவரும் நானும் ஒரு நாள் போட் க்ளப்பில் அவர் காரினுள் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தோம். இரண்டு பேரும் சாப்பிடுவதற்கு அவர் ஐஸ்கிரீம் வாங்கி வந்திருந்தார். அதில் கால் கிலோ அளவுக்கு போட்டிருந்தது முந்திரிப் பருப்பு.

ஒரு ஆஃப் பாட்டில் பிராந்தி குடித்திருந்தால் கூட அவ்வளவு கொழுப்பு என் உடம்பில் சேர்ந்திருக்காது. ஒரு வாரத்திற்கு கடும் பத்தியம் கிடந்து அந்த முந்திரிப் பருப்பை சமன் செய்தேன்.

யார் பேச ஆரம்பித்தாலும் ‘ஹெல்த் எப்படி இருக்கு? ’ என்ற டார்ச்சருடன் தான் ஆரம்பிக்கிறார்கள். எப்படி இவர்களை தவிர்ப்பது என்று தெரியவில்லை.

பேச்சு மட்டுமல்ல; சமயங்களில் பிறர் விடும் கொட்டாவி கூட பிரச்சினையாக இருக்கிறது எனக்கு. எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பின் இரண்டு வாட்ச்மேன்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதில் நைட் வாட்ச்மேனாக இருப்பவர் பெயர் வரதன். சினிமா சான்ஸ் தேடி ஆந்திராவிலிருந்து சென்னை வந்த லட்சக்கணக்கான ஜனங்களில் ஒருவர். முயற்சியில் தோல்வியுற்று வாட்ச்மேனாகி விட்டார்.

நான் இப்படி கெட்ட கனா கண்டு நடு நிசியில் விழித்துக் கொண்டு விடுகிறேன் அல்லவா ? உடனே சிறிது நேரத்தில் குழாயில் தண்ணீர் அடிக்க ஆரம்பித்து விடுவார் வரதன். அது ஒரு ஓட்டைக் குழாய். சத்தத்தில் எங்கள் குடியிருப்பே அதிரும். தண்ணீரை அடித்து வாசலில் நாங்கள் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றுவார். தினமும் இப்படி இரண்டு மணிக்கா தண்ணீர் அடிக்கிறார் என்ற சந்தேகம் வந்தது. இல்லை. நான் நான்கு மணிக்கு எழுந்தால் நான்கு மணிக்கு குழாய் நாராசம் செவிகளில் பாயும். சில சமயங்களில் தூங்கிபோய் ஆறு மணிக்கு எழுந்தால் ஆறு மணிக்கு குழாய் சப்தம் கேட்கும். அப்போது தான் தெரிந்தது; வரதன் நான் எழுந்து விளக்கைப் போட்டால் என்னை ‘இம்ப்ரெஸ் ’ செய்வதற்காக இந்த வேலையைச் செய்கிறார் !

இதனால் நான் விளக்கையே போடாமல் இருட்டிலேயே பல் துலக்கி விட்டு இருட்டிலேயே யோகாவை ஆரம்பித்துப் பார்த்தேன். ஆனால் வரதன் ஒரு சூரப்புலி. நான் எழுந்து விட்டதை எப்படியே அறிந்து கொண்டு குழாயை உடைக்க ஆரம்பித்து விடுவார்.

அடுத்த பிரச்சினை: பாட்டு. பெருங்குரலெடுத்து பழைய தமிழ்ப் பாடல்களை பாடுவார். பாடாத நேரங்களில் ஊருக்கே கேட்பது போல் கொட்டாவி விடுவார்.

‘ இப்படிக் கொட்டாவி விட்டு என் தூக்கத்தைக் கெடுக்காதே ‘ என்று எங்களுக்கெல்லாம் பாதுகாவலனாக இருக்கும் ஒரு நைட் வாட்ச்மேனிடம் போய்ச் சொல்ல முடியுமா ? ம்ஹூம். நான் படித்த மார்க்ஸ், எங்கெல்ஸெல்லாம் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். இந்த ஒரு ஆளாலேயே வீட்டை மாற்றி விடலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

* * *

சமயங்களில் எந்த விதமாகவும் தப்பிக்க முடியாதபடி சிலரிடம் மாட்டிக் கொண்டு விடுவோம். அந்த குஜராத்திகாரர் அறுவைத்திலகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மாட்டினால் ஒரு மணி நேரத்திற்கு பின்னி பெடல் எடுத்து விடுவார் என்று சொல்லியிருக்கிறாள் அவந்திகா. அவர் என்னுடைய சொந்தக்காரர். குஜராத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்றால் அவர் என் மைத்துனியின் மகனின் மாமனார். காதல் திருமணம்.

அவந்திகாவின் தந்தை இறந்த அன்று வீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அன்றைய தினசரி என் கையில் இருந்தது. வந்தார் அந்த சேட்.

‘ ஆகா, ஆபத்து நெருங்கிவிட்டதே ‘ என்ற கவலையுடன் நெளிய ஆரம்பித்தேன். எப்படித் தப்பிக்கலாம் என்று மனம் பல்வேறு வழிகளை யோசிக்க ஆரம்பித்தது.

“என்ன செய்கிறீர்கள் ? ”

“ரைட்டர் ”

“ஓ...ரைட்டர் ! ”

நல்ல வேளை, தமிழர்களைப் போல் ‘ எந்த போலீஸ் ஸ்டேஷன் ? ‘ என்று கேட்கவில்லை. ஆனால் வேறு விதமாக ஆரம்பித்து விட்டார் சேட்.

“என்ன எழுதுவீர்கள் ? துப்பறியும் நாவலா, மர்ம நாவலா ? சமூகமா, அரசியலா? ”

“எல்லாம் எழுதுவேன் ” என்று சொல்லி வைத்தேன். ஆனால் அவரோ அடுக்கடுக்காய் இதே போல் நூறு, இரு நூறு கேள்விகளை வைத்திருந்தார் போலிருக்கிறது. எடுத்துச் சரமாரியாய் வீச ஆரம்பித்தார்.

‘குஜராத், இமாசலப் பிரதேசம், திரிபுரா என்று கண்காணாத இடங்களிலிருந்தெல்லாம் வந்து டார்ச்சர் கொடுக்கிறார்களே! ’ என்று எண்ணியபடி அங்குமிங்கும் விழித்தேன். நல்ல காலமாக அவரது சகதர்மினி வந்து சேட்ஜீயை அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

அவர் இடம் காலியாக இருந்தது. யார் வந்து அமரப் போகிறார்களோ என்ற கவலையுடன் இருந்தேன். நல்ல வேளையாக அங்கே வந்து அமர்ந்தார். என் ஷட்டகர்(மைத்துனரின் கணவர்). ஷட்டகர் என்னை மாதிரி. அதிகம் பேச மாட்டார்.

ஆனால் நமக்கென்று ஒரு சாபம் இருக்கிறதே, அது வேலை செய்யும் அல்லவா?

ஆரம்பித்தார் ஷட்டகர். ” உங்களை மாதிரி தான் நானும்.... ”

“ அப்படியா, எப்படி ? ”

“ எப்போதும் படித்துக் கொண்டேதான் இருப்பேன் ”

“ ஓ... என்ன படிப்பீர்கள் ? ”

“ குமுதம், விகடன் ..... “

மேலும் அவ்ர் சொன்னதையெல்லாம் எழுதினால் நீங்கள் என்னை அடிக்க வந்து விடுவீர்கள். அதனால் சுருக்கமாகத் தருகிறேன்.

படிப்புதான் எனக்கு உயிர். கல்லூரியிப் பருவத்திலெல்லாம் நான் படிக்காத புத்தகமே கிடையாது. புத்தக்ப் புழு. எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பேன். இப்போதெல்லாம் எங்கே சார் படிப்பதற்கு நேரம் கிடைக்கிறது ? மனைவி குழந்தை என்று ஒரே பிரச்சினை. படிக்க வேண்டும் சார். படிப்பு தான் வாழ்க்கை. கல்லூரியில் படிக்கும் போது கவிதை கூட எழுதுவேன் தெரியுமா ? உங்களைப் போலவேதான் நானும். புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழேயே வைக்க மாட்டேன்.

அந்த நேரம் பார்த்து என் மைத்துனி வந்தாள். எந்த மைத்துனியுடனும் நான் ஹலோ என்ற வார்த்தைக்கு மேல் அடுத்த வார்த்தை பேசியதில்லை. அதுவும் இந்த மைத்துனியிடம் – கடைசி மைத்துனி – ஹலோ கூட சொல்ல மாட்டேன். லேசாக ஒரு முறுவல். அவ்வளவுதான். (அழகிகளோடு எதற்கு வம்பு என்று தான்).

இது மரணம் நிகழ்ந்த வீடு. இந்த இடத்தில் சம்பிரதாயமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எங்கள் அருகே வந்து அமர்ந்த மைத்துனியிடம் “ என்ன, உங்கள் கணவர் பயங்கரமாகப் படிப்பாராமே ? “ என்றேன்.

” ஐயோ.... புத்தகத்தை எடுத்து விட்டார் என்றால் அப்புறம் கிட்டத்தில் நெருங்கவே முடியாது “ என்றாள்.

பிறகு தன் கணவரிடம் “ எப்போ ஊருக்கு ? “ என்றாள்.

அவர் மிக அடங்கின குரலில், “ இன்னிக்கு நைட் “ என்றார். அவரும் அவளிடம் பேசும் போது என்னைப் போலவே தலையைத் தாழ்த்திக் கொண்டு ஏதோ ஒரு அந்நியருடன் பேசுவதைப் போல் பேசியதை கவனித்தேன்.

உடனே எழுந்து போய் விட்டாள் மைத்துனி. ஷட்டகரும் பழைய படி சகஜ நிலைக்குத் திரும்பி வந்து மீண்டும் ஆரம்பித்தார்.

“ சீரியலுக்கெல்லாம் எழுதுவதில்லையா ? “

“ சே சே... அதெல்லாம் பக்கா கமர்ஷியல். நான் எழுதுவது சீரியஸ் “

“ சீரியஸ்னா ? “

“ லிட்ரேச்சர் “

” எனக்கு கூட லிட்ரேச்சர் என்றால் உயிர். காலேஜ் படிக்கும் போது லிட்ரேச்சர்தான் எப்போதும். ஹேமா ஆனந்த தீர்த்தன், தமிழ் வாணன், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன்..... அதிலும் அந்த சாண்டில்யன் இருக்கிறாரே, பக்கம் பக்கமாய் என்னமாய் வர்ணிப்பார் மனுஷன். ... அடடா... இப்போது எங்கே சார் நேரம் கிடைக்கிறது.... மனைவி, குழந்தை என்று ஒரே பிரச்சினை..... ”

” ........................ “

“ சினிமாவுக்கு எழுதுவதில்லையோ ? “

“ ரஜினி, கமல், ஷங்கர் என்று எல்லோரும் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நான் தான் ஒரேயடியாக மறுத்து விட்டேன் “ (சும்மா கப்ஸா)

“ அட, என்ன சார் நீங்க ? சுஜாதா பெரிய ஆளானதே ஷங்கர் படத்துல எழுதித்தானே சார். எழுதுங்க சார்.... ”

இப்படியே இந்த உரையாடல் ஒரு மணி நேரம் தொடர்ந்தது.

அவர் நகர்ந்ததும் அந்த இடத்தில் வந்து அமர்ந்தாள் ஷட்டகரின் மகள் பூஜா.

“ என்ன கிளாஸ் படிக்கிறே செல்லம் ? “ என்றேன் பூஜாவிடம்.

“ ஐயோ, என்ன பெரீப்பா இது ? இதோட ஒரு 30 பேர் இதே கேள்வியைக் கேட்டுட்டா.... இப்போ நீங்க ! சரி. சொல்றேன். செகண்ட் ஸ்டாண்டர்ட் “

“ ஓ... ஐ ’ ம் ஸாரி செல்லக் குட்டி. இனிமே யார்ட்டேயும் இந்தக் கேள்வியைக் கேட்கலே, சரியா ? “

“ நோ... நோ... எல்லார்ட்டயும் கேளுங்க. என்கிட்ட மட்டும் கேட்காதீங்க “


Date : 26.03.2008


Courtesy : http://www.charuonline.com/


வெள்ளிப் பாத சரம்

திரும்பவும் ஆரம்பமாகிவிட்டது அதே பழைய பிரச்சினை. உயிர்மை போன்ற பத்திரிக்கைகளில் எழுதும் போது எனக்கு ஒரு தனிமை வாய்க்கப் பெற்றது. அம்மாதிரி பத்திரிக்கைகளில் எழுதும் போது வாசகர்களுக்கும் எனக்கும் ஒரு நீண்ட இடைவெளி இருந்தது. என்னைப் போன்ற reclusive – ஆன எழுத்தாளனுக்கு அது மிகுந்த பல நன்மைகளைச் செய்துள்ளது. ஆனால் இப்போது இணைய தளத்தில் எழுத ஆரம்பித்து விட்டதால் ஆளாளுக்கு அறிவுரை செய்யக் கிளம்பி விடுகிறார்கள்.

பல அன்பர்களின் அறிவுரை, ஜெயன் மாதிரி ஆட்களுக்கெல்லாம் இவ்வளவு நீண்ட பதில் எழுதி என் சக்தியை வீணடித்துக் கொள்ள வேண்டுமா என்பது.

என்னைப் பற்றிய அவதூறுகளுக்கு பொதுவாக நான் பதில் கூறுவதில்லை. ஜெயனின் அராஜகத்தை கடந்த 5 வருடங்களாக நான் மன்னித்து வந்தேன். நேசக்கரமும் நீட்டினேன். ஆனால் அந்த ஆள் கத்தியை மறைவாக வைத்திருந்தார். பாவம், என்னிடம் உள்ள கவசம் பற்றி அவர் அறியவில்லை. அவருடைய கத்தி அவரையே குத்தி விட்டது.

ஜெயன் போன்ற ஆட்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் நான் ஒரு நோயாளியாகத்தான் ஆகியிருப்பேன். இல்லாவிட்டால் அவரது பெற்றோரைப் போலவும், அவரது நண்பனைப் போலவும் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். மற்றவர்களைத் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு விஷம் தோய்ந்த வார்த்தைகளை எழுதித் தள்ளுபவர் ஜெயன்.

நான் எப்போதும் காலை நான்கு மணிக்கே எழுந்து கொள்ளும் வழக்கம் உடையவன். இப்போதெல்லாம் கெட்ட கனா வந்து நடுநிசி ஒரு மணிக்கே உறக்கம் கலைந்து விடுகிறது. கெட்ட கனா என்றது ஜெயனை. எனவே, நான் ஜெயனுக்கு பதிலும் எழுதாமல் போனால் சட்டையைக் கிழித்துக் கொண்டு தான் அலைய வேண்டியிருக்கும்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டும் இயேசுவைப் போல் வாழ்வதற்குத் தான் ஆசையாக இருக்கிறது; ஆனால் முடியவில்லையே?

பார்த்தீர்களா, உங்களுடைய ஆலோசனை மற்றும் அறிவுரையின் காரணமாக மேலும் சில பக்கங்களை ஜெயனுக்காக ஒதுக்க வேண்டியதாகி விட்டது.

மேலும், ஜெயனுக்கு நான் எழுதிய பதிலை ஏன் ஒரு பதிலாகப் பார்க்கிறீர்கள்? அதில் ஷேக்ஸ்பியரைப் பற்றி எழுதியுள்ள குறிப்பை போல் பல விஷயங்கள் உள்ளனவே, அதை ஏன் காணத் தவறுகிறீர்கள் ?

அடுத்த விஷய்ம், பண உதவி. பல அன்பர்கள் எழுதியுள்ளனர். பண உதவி தவிர வேறு எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று.

உங்கள் அனைவருக்கும் என்னுடைய ஒரே அன்பான வேண்டுகோள் : முடிந்தால் உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் எனக்கு விளக்கமெல்லாம் எழுதி என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்.

மற்றவர்களிடம் பண உதவி கேட்பதைப் போல் ஈனத்தனமான காரியம் வேறு எதுவுமில்லை. அதை நான் செய்து கொண்டிருக்கிறேன். தயவு செய்து என்னை மேலும் மேலும் பிச்சைக்காரனைப் போல் உணரச் செய்யாதீர்கள்.

நான் பிச்சைக்காரனாக வளர்வதற்கு தமிழ்ச் சூழல் மட்டுமே காரணம். என்னுடைய நாவல் 250 பிரதிகள் மட்டுமே விற்பனையாகியிருக்கிறது. ஒரு துருக்கி எழுத்தாளனின் நாவல் 1 லட்சம் பிரதிகள் விற்கின்றன. புரிகிறதா பிரச்சினை ?

15 ஆண்டுகளுக்கு முன்பு சில காலம் ஜேப்படித் திருடனாக வாழ்ந்திருக்கிறேன். ஒரு முறை பிளேட் போட்டபோது 3 பவுன் தங்கச் சங்கிலி கிட்டியது. அதை விற்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஊரிலுள்ள சேட்டுகள் அனைவருமே என் முகத்தைப் பார்த்ததும் கண்டு பிடித்து விடுவார்கள். வாங்கிக் கொள்ள மறுக்க மாட்டார்கள். ஆனால் 3 பவுன் சங்கிலியை 1 பவுன் விலைக்குக் கேட்பார்கள்.

இப்போது மீண்டும் நான் அந்தப் பழைய வாழ்க்கைக்குள் செல்ல முடியுமா, சொல்லுங்கள் ?

பனகல் பார்க்கில் எத்தனையோ நாட்கள் பல நாள் பட்டினியுடன் படுத்துக் கிடந்திருக்கிறேன். அடுத்த வேளை சோறு எப்போது கிடைக்குமோ என்ற நிச்சயமில்லாமல் பட்டினி கிடப்பதைப் போன்ற ஒரு கொடுமை வேறு எதுவும் இல்லை. ஒரு நாள் ஒரு நாய், காய்ந்து வறட்டி போல் ஆகி விட்ட மனித மலத்தைத் தின்று கொண்டிருந்தது. அந்த நாய்க்கும் எனக்கும் அப்போது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இப்போதும் என்னுடைய நிலை அதுதான். ஒரே வித்தியாசம். என்னை இப்போது பலருக்கும் அடையாளம் தெரிகிறது. எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது.

எனவே, திரும்பவும் சொல்கிறேன். எனக்கு உங்களுடைய ஆலோசனை அறிவுரை எதுவும் தேவையில்லை.

பண உதவி செய்ய முடியாதது பற்றிக் குறிப்பிட்டு தயவு செய்து மின்னஞ்சல் செய்யாதீர்கள். முடிந்தால் உதவி செய்யுங்கள்.

ஒரு அன்பர் குறிப்பிட்டார், ‘ நானும் உங்களைப் போல் தான் சாரு ‘ என்று. அதாவது, அவருடைய நிதி நிலைமையும் என்னைப் போல்தான் உள்ளதாம்.

எனக்கு மனசில் ஒரு விஷயம் தோன்றியது. ‘ நான் மாமா வேலை செய்திருக்கிறேன்; நீர் செய்திருக்கிறீரா ? ‘. கேட்கவில்லை. காரணம், அவர் என் நண்பர்.

* * *

இவ்வளவு பிரச்சினைக்கிடையிலும் வாழ்க்கை படு சுவாரசியமாகவும், ரசிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

நான் குடித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு விஷயம். நண்பர் சுதேசமித்திரன் சென்னை வந்திருந்தார். நான் நண்பர்களைச் சந்திக்கும் இடம் பார்க் ஷெரட்டன். நிக்கியின் புண்ணியத்தால் காசு கொடுக்க வேண்டியதில்லை. பில்லை அவர்கள் நிக்கிக்கு அனுப்பி விடுவார்கள்.

பார்க் ஷெரட்டன் எனக்குத் தாய் வீடு மாதிரி. கைத்தொலைபேசியை மறந்து விட்டு வந்து விட்டால் மறு நாள் கொண்டு வந்தே கொடுப்பார்கள்.

ஆனால் மித்திரனோ ஷெரட்டன் வேண்டாம்; டாஸ்மாக்கே போதும் என்றார். சிறுபத்திரிக்கைக்காரர். அப்படித்தான் இருப்பார் என்று போனேன்.

மறு நாள் பார்த்தால் கண்ணாடியைக் காணோம். கண்ணாடி விலை 20,000ரூ. Boss என்ற ப்ராண்ட். பதறிப் போய் டாஸ்மாக்குக்குப் போனேன். பொடியன்கள் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் எடுத்து வைத்திருப்பார்கள். டாஸ்மாக்கிலிருந்து வீட்டுக்கு வர ஆட்டோ கிடைக்காததால் நடந்தே வந்திருக்கிறேன். சிறிது தூரம் தான். வழியில் விழுந்திருக்கிறது என்று புரிந்தது.

ஒரு பொடியன் ‘ இருங்கண்ணே ‘ என்று கூறி உள்ளே போய் வேறொரு கண்ணாடியை எடுத்து வந்து கொடுத்து போட்டுப் பார்க்கச் சொன்னான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு யாரோ விட்டுப் போனதை எடுத்து வைத்திருக்கிறான் பொடியன். கண்ணாடியைத் தொலைத்தவர் வந்து கேட்கவில்லை.

அடுத்த கண்ணாடி வாங்கும் வரை போட்டுக் கொள்ளலாம் என்று முயற்சி செய்தேன். பொருந்தவில்லை.

கிளம்பும்போது பொடியனிடம் 10ரு.கொடுத்தேன். மறுத்து விட்டான்.

“ என்னாண்ணே, நீங்களே கண்ணாடியைத் தொலைச்சுட்டு நிக்றீங்க. உங்க கிட்ட போய் பணம் வாங்குறதா ? “ என்றான்.

தினம் காலை 10 மணியிலிருந்து இரவு ஒரு மணி வரை அசராமல் வேலை செய்யும் பத்து வயதுச் சிறுவனின் வார்த்தைகள் அவை. இந்த வார்த்தைகளைக் கேட்பதற்காகவே இன்னும் எத்தனை கண்ணாடிகளை வேண்டுமானாலும் தொலைக்கலாம் போல் இருந்தது.

மற்றொரு சம்பவம் சமீபத்தில் சேட்டு கடையில் தாலியை விற்ற போது நடந்தது. என் நண்பர் ஒருவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. பெயர் வைக்கும் வைபவத்துக்குச் சென்றிருந்தேன்.

வெறும் கையுடன் கிளம்பிய போது அவந்திகாவிடம் சொன்னேன். “ கையில் காசு இருந்திருந்தால் பாப்பாவுக்கு ஒரு கொலுசு வாங்கலாம் “

சேட்டு கடையில் தாலியை விற்றுப் பணத்தை வாங்கி எண்ணிக் கொண்டிருந்த போது அவந்திகா மலர்ந்த முகத்துடன் என்னிடம் சொன்னாள்: “ சாரு, பாப்பாவுக்கு ஒரு கொலுசு வாங்கி விடலாமே ? “

Date 25.03.2008

Courtesy : - http://www.charuonline.com



தலைஎழுத்து

காதல் என்பது காக்கா ஆய் மாதிரி
யார் மேல எப்ப விழும்னு சொல்ல முடியாது .
அதை தொடைச்சுட்டு போறதும்
நக்கி பாக்குறதும் அவன் அவன் தலைஎழுத்து .