கைநாட்டுக் கவிதைகள்

on Sunday, September 4, 2011


வரிசையாய்.....
சத்துணவுக்கு
சாப்பாட்டு தட்டோடு தம்பி
வேலையில்லா
பட்டதாரி உதவிக்தொகைக்கு
சான்றிதழோடு அண்ணன்
கறி விருந்துக்கும்,
கவர் பணத்திற்கும்
கையில் ஓட்டோடு
காத்திருக்கும் அப்பா
உலக வங்கியின்
உதவிக்கு காத்திருக்கும் அரசு
'எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள்'
பாரதி பாடலை
மனப்பாடம் செய்யும்
ஏதும் அறியா தங்கை...
இனிக்கும் கண்­ணீர்!
அவள்
அடுக்குப் பற்களில்
அகப்பட்டு
கடிபட்டபோது.....
கவலைப்பட்டது
கரும்பு
இவள்
இதழ்களுக்குத்தான்
இரையாவேன் என்று
தெரிந்திருந்தால்
இன்னும் கொஞ்சம்
வளர்ந்திருப்பேனே!




சேமிப்பு!
உன் கை நழுவி
உடைந்த வளையல் துண்டுகள்
உன் அடர்ந்த
கூந்தலிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட
'அந்த ஒரு முடி'
நீ வெட்டிவீசிய
பிறைவடிவ 'நகங்கள்'
உன் பின்னல்களை
தன் வசப்படுத்திய
'ஹேர்பின்கள்' சில
நீ ரொம்பவுமே
நேசித்த 'பச்சை ரிப்பன்'
உன்னோடு
கலந்துறவாடிய
எண்ணற்றப் பொருட்களின்
சேமிப்பில்
நான் கரைந்துபோக....
புதிய வரவாய்
உன் அப்பா
அனுப்பிவைத்த
உன் திருமண அழைப்பிதழும்....!

அப்பா...

on Monday, December 27, 2010

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்




முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...





அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா முகம்
வாடும் போது




உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...



சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு





















என்ன பிழை செய்தோம்

on Thursday, April 16, 2009



Best Poem - Nominated by UN

on Monday, March 30, 2009


When I born, I black
When I grow up, I black
When I go in Sun, I black
When I scared, I black
When I sick, I black
And when I die, I still black
And you white fellowWhen you born, you pink
When you grow up, you white
When you go in sun, you red
When you cold, you blue
When you scared, you yellow
When you sick, you green
And when you die, you gray
And you calling me colored?

தலைஎழுத்து

காதல் என்பது காக்கா ஆய் மாதிரி
யார் மேல எப்ப விழும்னு சொல்ல முடியாது .
அதை தொடைச்சுட்டு போறதும்
நக்கி பாக்குறதும் அவன் அவன் தலைஎழுத்து .

"மகளிர் மட்டும்"

on Sunday, March 29, 2009

மகளிர் பள்ளி
மகளிர் கல்லூரி
மகளிர் மட்டும் பஸ்
மகளிர் விடுதி
என்றெல்லாம் பெண்களைத்
தனிமைப்படுத்தி,
தயார்ப்படுத்தி,
மணமுடித்து வைக்க -

ஆணைப் புரியாமல்
பெண்ணும்,
பெண்ணை பிரமிப்பாகப்
பார்க்கும் ஆணும்,
எதிர்பார்ப்புகள் வெவ்வேறாய்,
சிக்கலுடன்
தொடங்கும் வாழ்க்கை!

பெண்களை
இயல்பாய் பார்க்க ஆணும்,
ஆண்களுடன்
நட்புடன் பழக பெண்ணும்,
வாய்ப்பற்று இருப்பது
சிக்கல்களின் தொடக்கம்.

விலங்குகளும், பறவைகளும்
பால்பேதம் பார்ப்பதில்லை!
குழந்தைகளாக வளர்க்காமல்,
ஆண், பெண் என்று
ஆரம்பம் முதல் வளர்த்ததாலே,
உறவுச் சிக்கல்கள்;
பணியிடத்தில் குழப்பங்கள்.

பணியில் தொடங்கி,
பாராளுமன்றம் வரை
வந்துவிட்டபின்
பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல,
காவல் நிலையத்திலும்
தேவையில்லை,
மகளிர் மட்டும்.

"அரசியல் பிழைத்தோர்"

சமூகத்தில் ஒரு பாதி,
முப்பத்து மூன்று சதவிகித
இடங்களுக்காக,
போராடப் போகிறார்களாம்!

அவர்கள்
கேட்க வேண்டியது,
ஐம்பது சதவிகிதமல்லவா?

அரசியல் பெண்களின்
முகவரிகளை எல்லாம்
தொகுத்தபோதுதான்
தெரிய வந்தது,

அவர்கள்
தங்களுக்கென்று
தனி முகவரி மட்டுமல்ல,
முகமே இல்லாதவர்கள் என்பது!

அவர்கள்
பின் கதவு வழியாக
பினாமியாக வந்து
அரசியல் அரிதாரம்
அவசரமாய் பூசியவர்கள்;

பழம் தின்று கொட்டைபோட்ட
அரசியல் அண்ணாச்சிகளின்
மகள், மனைவி, மருமகள்,
அல்லது நண்பிகள்;

பெண் பினாமிகளை,
ஆண் பினாமிகளைவிட
ஆபத்தானவர்களாக,
குறித்து வைத்துள்ளது வரலாறு.

பினாமிகளுக்கா
முப்பத்து மூன்று?

சுயமாய் பெண்கள்
வரட்டும் அரசியலுக்கு;
சுத்தப்படுத்தலாம்
இருபாலரும் சேர்ந்தே,
சாக்கடையை!

வேலைக்குச் செல்லும் பெண்ணே....!

வேலைக்குச் செல்லும் பெண்ணே....!

மேலே உரசும் எருமை மாடுகள்,
முதுகின் மேல் மூச்சு விடும்
விஷ சர்ப்பங்கள்,

பார்வையால் கொத்தும்
பிணம் தின்னிக் கழுகுகள்,
எட்டிப் பார்க்கும் ஓட்ட்கங்கள்,

வழியில் நிற்கும் கொழுத்த கழுதைகள்,
அதிகார வர்க்க கடுவன் பூனைகள்,
தெரியாமல் பட்டதாய்
தொட்டுப் பார்க்கும் குள்ளநரிகள்,

சந்தர்ப்பம் எனும் உறுமீனுக்காய்
ஒற்றைக் காலில் நிற்கும் கொக்குகள் -

எப்படி சமாளிக்கிறாய்,
தனியாக ஒரு மிருகக் காட்சி சாலையை?

பெண் நிதானமாகப் பதில் சொன்னாள்:
"எனக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது,
சிங்கம், அது பெண் சிங்கம்!"

மழை

on Thursday, March 26, 2009

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"குடை எடுத்து போகவேண்டியதுதானே"
என்றான் அண்ணன்
"எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே"
என்றாள் அக்கா
"சளி பிடிச்சிக்கிட்டு
செலவு வைக்க போற பாரு"
என்றார் அப்பா
தான் முந்தனையால் என் தலையை
துவட்டிகொண்டே
திட்டினால் அம்மா என்னையல்ல;
மழையை !"....

விழுந்தேன்

on Friday, March 20, 2009

நான் காதலில் விழுந்தற்கு
பூவி ஈர்ப்பு விசை தான் காரணமோ !

உண்மைக்காதல்

on Thursday, March 19, 2009

உண்மைக்காதல்
*****************
இதயத்தை விற்று வாங்கிய காதலிது வாழ்வில் ஒருமுறைதான் வரும் இதயம் ஒன்றென்றால் !

காதலிக்கு

சரி என்றால் சொல்லிவிடு
நான் வருவேன் உன்னோடு.
இல்லை என்றால் வந்துவிடு
என் கல்லறைக்கு மலரோடு...

பூவே..

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது -
'ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது ?' என்று !.

நினைப்பு

என்னவளை ஒரு தினம்
ஒரு முறை மட்டுமே நினைக்கிறேன் .

"காலையில் கண் விழித்ததிலிருந்து
இரவு கண் முடும் வரை ".

on Wednesday, March 18, 2009

ஆகஸ்ட் 15 1947,
இன்று முதல் விடுதலை ...
இனி யாரிடமும் அடிமை ஆகி கொள்ளலாமென்று .

தபூ சங்கர் கவிதைகள்

ஏற்கனவே பூத்த பூ
என்றாலும்
நீ சூடும் போது
மறுபடியும் பூக்கிறதே !